சலூன் கடைக்குச் சென்ற வடமாநில தொழிலாளி… பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்… இரவில் நடந்த பயங்கர சம்பவம்…!

Spread the love

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அர்ஜுன் பிரசாத் யாதவ் (53) என்பவர் கடந்த சில வருடங்களாக திருச்செந்தூரில் தங்கி அருகே உள்ள அனல் மின் நிலைய கட்டுமான பணியில் தனியார் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இதனிடையே நேற்று மாலை குலசேகரப்பட்டினத்திற்கு சென்று சேவிங் செய்துவிட்டு வருவதாக தனது நண்பர்களிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். மாலை நேரத்தில் கடைக்குச் சென்ற அவர் நீண்ட நேரம் ஆகியும் திரும்பாததால் அவருடைய நண்பர்கள் பல இடங்களில் தேடி அலைந்தனர்.

இதனிடையே இரவு 9 மணிக்கு தான் பணியாற்றும் டெக்ஸ் செல் நிறுவனத்தின் அதிகாரியான ஜெகதீசன் என்பவருக்கு செல்போனில் தொடர்பு கொண்ட அர்ஜுன்”தன்னை அடையாளம் தெரியாத சிலர் அடித்து பணம் கேட்பதாகவும், செல்போன் பாஸ்வேர்டு கேட்பதாகவும்”இந்தியில் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அவருக்கு ஜெகதீசன் மீண்டும் போன் செய்த போது ஸ்விட்ச் ஆஃப் என வந்துள்ளது. உடனே ஜெகதீசன் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து பல இடங்களில் தேடினர்.

அப்போது போலீசாருக்கு டாஸ்மாக் கடையின் பின்புறம் கொலை செய்த உடல் பாதி எரிக்கப்பட்ட நிலையில் ஒருவர் சடலமாக கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. உடனே தகவல் அறிந்து சென்ற போலீசார் அங்கு இறந்து கிடந்தது அர்ஜூன் என்பதை உறுதி செய்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் குலசேகரப்பட்டினத்தை சேர்ந்த முத்துச்செல்வன் (27) மற்றும் மூர்த்தி (27) ஆகிய இரண்டு பேரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். எதற்காக அவர்கள் கொலை செய்தார்கள் கொலை செய்துவிட்டு ஏன் அவரை எரிக்க வேண்டும் என்று போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு…! SBI வங்கியில் 1,500 பணியிடங்கள்… விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே…!”

1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…

2 மணத்தியாலங்கள் ago

பேப்பர் பேனாவுக்கு ₹986 கோடி செலவிட்ட SBI… டிஜிட்டல் உலகிலும் தொடரும் ஸ்டேஷனரி செலவு…!!

பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…

3 மணத்தியாலங்கள் ago

போன்பே பயன்படுத்துபவரா நீங்கள்..? இனி ₹100 அபராதம்… புதிய அதிரடி உத்தரவு…!!

போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…

3 மணத்தியாலங்கள் ago

“டிகிரி முடிச்சவங்களுக்கு எஸ்பிஐ கொடுத்த ஜாக்பாட்.. 1,500 காலியிடங்கள்.. கடைசி தேதி எப்போது தெரியுமா?.. உடனே அப்ளை பண்ணுங்க”…!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…

3 மணத்தியாலங்கள் ago

“இப்படியும் கூட சம்பாதிக்கலாமா?.. ஒரு ரீல்ஸுக்கு ரூ.76 லட்சம்.. பார்ட்டிக்கு வர ரூ.25 லட்சம்.. ஓரியின் ‘மாஸ்’ பிசினஸ் மாடல்..!!

முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…

3 மணத்தியாலங்கள் ago

திமுகவில் இருந்து விலகும் செந்தில் பாலாஜி..? அதிமுக போட்ட ரகசிய ப்ளான்… அதிர்ச்சியில் ஸ்டாலின்…!”

திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…

3 மணத்தியாலங்கள் ago