சர்வாதிகார ஆட்சிக்கும், கடுமையான சட்டதிட்டங்களுக்கும் பெயர்பெற்ற வடகொரியாவில், சமீபத்தில் நடந்து முடிந்த பொதுத்தேர்தல் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. பெயரளவிற்கு நடத்தப்படும் இந்தத் தேர்தலில், கிம் ஜோங் உன் வழக்கம் போல 99.93 சதவீத வாக்குகளைப் பெற்று மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மீதமுள்ள 0.07 சதவீத வாக்காளர்கள் வெளிநாடுகளிலும் கடற்படையிலும் பணியில் இருந்ததால் வாக்களிக்கவில்லை என்றும், சுமார் 0.3 சதவீத மக்கள் தேர்தலைப் புறக்கணித்ததாகவும் கூறப்படுகிறது. பொருளாதாரத் தடைகளைப் பற்றிக் கவலைப்படாமல் தனது அதிகாரத்தை நிலைநாட்டி வரும் கிம் ஜோங் உன்னின் இந்த வெற்றி, அந்நாட்டின் மீதான அவரது பிடியை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில், கிம் ஜோங் உன்னின் இளம் வயது மகள் ஜூ ஏ, கடந்த சில மாதங்களாகத் தனது தந்தையுடன் பொது நிகழ்ச்சிகளில் அடிக்கடி தோன்றி வருவது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான ஒரு வீடியோவில், ராணுவ டாங்கி ஒன்றின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து ஜூ ஏ அதனை இயக்குவதும், அவருக்குப் பின்னால் அமர்ந்து தந்தை கிம் ஜோங் உன் ஆலோசனைகளை வழங்குவதும் பதிவாகியுள்ளது. சீருடை அணிந்த ராணுவ அதிகாரிகளின் பாதுகாப்புடன் நடைபெறும் இத்தகைய ராணுவப் பயிற்சிகள், ஜூ ஏ வெறும் மகளாக மட்டுமல்லாமல், ஒரு அதிகாரமிக்க பிம்பமாக வளர்க்கப்படுவதைக் காட்டுகின்றன.
ஜுஏ வின் நிலையைப் பற்றி வடகொரிய அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. இருப்பினும், கடந்த இரண்டு ஆண்டுகளாக ராணுவ நடவடிக்கைகள், ஏவுகணை சோதனைகள் மற்றும் முக்கிய அரசு விழாக்களில் அவர் தொடர்ச்சியாகப் பங்கேற்று வருவது, கிம் ஜோங் உன்னிற்குப் பிறகு அவரே அடுத்த வாரிசாகச் செயல்படுவார் என்பதற்கான வலுவான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது. ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மற்றும் போர்ப்பயிற்சிகளை அவர் முன்னின்று கவனிப்பது, வடகொரியாவின் எதிர்காலத் தலைமை ஒரு பெண்ணின் கையில் ஒப்படைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பை உலக நாடுகளிடையே ஏற்படுத்தியுள்ளது.
தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையேயான கடல் பகுதியில் வடகொரியா தொடர்ந்து பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி வருவதால் அந்தப் பிராந்தியத்தில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில், கிம் ஜோங் உன் தனது மகளை ராணுவப் பயிற்சிகளில் ஈடுபடுத்துவது, அண்டை நாடுகளுக்கு விடுக்கப்படும் ஒரு மறைமுக எச்சரிக்கையாகவும் கருதப்படுகிறது. ராணுவ பலத்தை மட்டுமே தனது தாரக மந்திரமாகக் கொண்டுள்ள வடகொரியா, ஜூ ஏ-வை ஒரு ராணுவத் தலைவராக உருவாக்குவதன் மூலம் தனது ஆதிக்கத்தைத் தலைமுறை கடந்து தொடரத் திட்டமிட்டு வருவது தெளிவாகத் தெரிகிறது.
தமிழக அரசியலில் வரவிருக்கும் இடைத்தேர்தல்கள் மற்றும் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் சமீபத்திய…
தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட கொடூர…
நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் சரத்குமார், தான் அரசியலில் இருந்து முழுமையாக ஒதுங்கிவிட்டதாகக் கூறியுள்ளது பாஜக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை…
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டம் காசரோல் காவல் எல்லைக்குட்பட்ட மூர்கியா கிராமத்தில், ஒரே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த அண்ணன்,…
ஹரியானா மாநிலம் சோனிபட் பகுதியில், ஆபத்தான ரகத்தைச் சேர்ந்த பிட்புல் வளர்ப்பு நாய் ஒன்று, 6 மாதமே ஆன கைக்…
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகிலுள்ள ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் அதிகாலை 5 மணி முதலே அதிர வைக்கும் ஒரு சம்பவம்…