உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டம் காசரோல் காவல் எல்லைக்குட்பட்ட மூர்கியா கிராமத்தில், ஒரே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த அண்ணன், தங்கையை போர்வைக்குள் பதுங்கியிருந்த கொடிய விஷப்பாம்பு கடித்ததில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.
வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில், கட்டிலில் இருந்த போர்வைக்குள் மறைந்திருந்த பாம்பு முதலில் 10 வயதான காமினி என்ற சிறுமியைக் கடித்துள்ளது. பின்னர், அதே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த அவளது அண்ணன் பங்கஜின் காலில் சுற்றிக் கொண்டு கொடூரமாகக் கடித்துள்ளது.
சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த குடும்பத்தினர் இருவரையும் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி 10 வயதுச் சிறுமி காமினி பரிதாபமாக உயிரிழந்தார். ஆபத்தான நிலையில் உள்ள அண்ணன் பங்கஜிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும் சுறுசுறுப்பையும் அதிகரிக்கும் நோக்கில், நீண்ட காலமாக ஒரே இடத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் மற்றும்…
தமிழக அரசியலில் வரவிருக்கும் இடைத்தேர்தல்கள் மற்றும் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் சமீபத்திய…
தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட கொடூர…
நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் சரத்குமார், தான் அரசியலில் இருந்து முழுமையாக ஒதுங்கிவிட்டதாகக் கூறியுள்ளது பாஜக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை…
ஹரியானா மாநிலம் சோனிபட் பகுதியில், ஆபத்தான ரகத்தைச் சேர்ந்த பிட்புல் வளர்ப்பு நாய் ஒன்று, 6 மாதமே ஆன கைக்…
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகிலுள்ள ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் அதிகாலை 5 மணி முதலே அதிர வைக்கும் ஒரு சம்பவம்…