#image_title
கைபேசி எனப்படும் மொபைல் போன்கள் வந்த காலத்தில் முதன்முதலாக வெளிவந்தது Nokia போன்கள் தான். Nokia 1600 போனை தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. எல்லா மொபைல் போனுக்கும் முன்னோடி அதுவாகத்தான் இருந்தது. ஆனால் என்னவோ போக போக பல மொபைல் கம்பெனிகள் வந்ததால் Nokia நிறுவனம் பின்னோக்கி சென்றது. எந்த ஒரு விற்பனையும் வெளியிடவில்லை. தற்போது கம்பேக் கொடுக்கும் விதமாக Nokiaவில் பட்டன் போன்கள் அறிமுகமாகி இருக்கிறது. இது பலருக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தியாக இருக்கலாம்.
Nokia ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்யும் HMD குளோபல் நிறுவனம் Nokia 105 4G எடிசன் மற்றும் Nokia 110 4G எடிசன் மாடல்களை ஐரோப்பாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்திருக்கிறது. இந்த இரண்டு போன்களும் பல சிறப்பு அம்சங்களுடன் வருகிறது. பின்புற கேமரா அமைப்பு வித்தியாசமாக அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த இரண்டு போன்களிலும் மைக்ரோ எஸ்பிக்கு பதிலாக டைப் சி யுஎஸ்பி போர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது பயனர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.
1.77 இன்ச் hd டிஸ்ப்ளே வசதியுடன் 120 முதல் 160 பிக்ஸல் சிறந்த பாதுகாப்பு வசதி சக்தி வாய்ந்த டி 107 யூனிசாக் ப்ராசசர் QVGA கேமரா ஆதரவுடன் வருகிறது. மேலும் 1450mAh பேட்டரி ஆதரவுடன் இந்த இரண்டு போன்களும் வெளிவருகிறது. எனவே இந்த ஃபோன்களை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை படவேண்டாம். நீண்ட நேரம் சார்ஜ் நிக்கும்.
இதில் பிளாஷ் லைட் ஆதரவும் 4g நெட்வொர்க் உடனும் இந்த போன்கள் வருகிறது. அது மட்டுமல்லாமல் எப்எம் ரேடியோ நோக்கியாவின் கிளாசிக்கான கேம்கள் போன்றவைகள் இதில் இருக்கிறது. இந்த Nokia ஃபோன்கள் ஆனது கிளாசிக் பிளாக் வைப்ரண்ட் ப்ளூ பரபில் ஆகிய நிறங்களில் வெளிவருகிறது. இதன் விலை குறித்து விரைவில் வெளியிடப்படும் என்று HMD குளோபல் நிறுவனம் அறிவித்திருக்கிறது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவில், ஒரு தாய் தனது மூன்றரை வயது சிறுவனிடம், "நான் உன்னை…
தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 22) சற்று சரிவைக் கண்டுள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன்…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் வீடியோக்களில், அது 'AI-ஆல் உருவாக்கப்பட்டது' (AI Generated) என்ற லேபிளை வீடியோவின்…
பஸ்தி மாவட்டத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட அரசுப் பள்ளியில் பெண் குழந்தைகளைச் சேர்க்க நிர்வாகம் மறுத்து வருகிறது. இதற்கு அவர்கள்…
சண்டிகரில் உள்ள அரசுப் பள்ளியில் பணியாற்றும் 20 பெண் ஊழியர்கள், சக ஆசிரியர் ஒருவர் தங்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக்…
ஐதராபாத்தில் சமூக வலைதளத்திற்காக 'ரீல்ஸ்' (Reels) வீடியோ எடுக்க முயன்ற 14 வயது சிறுவன், அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து…