பிரபல தொலைக்காட்சி நடிகை சுபாஷினி (36), சென்னை அய்யப்பன்தாங்கலில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பல்வேறு படப்பிடிப்புகளில் பங்கேற்று வந்தார். இந்நிலையில், பெங்களூருவில் உள்ள தனது கணவர் பிபின் சந்திராவிடம் (38) வீடியோ காலில் பேசிவிட்டு, திடீரென அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போரூர் போலீசார், நடிகையின் இந்த விபரீத முடிவிற்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மனைவியின் எதிர்பாராத மறைவால் மிகுந்த துயரத்தில் உள்ள பிபின் சந்திரா, தனது சமூக வலைதளப் பக்கத்தில் சுபாஷினி குறித்து மிகவும் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “உன் ஆத்மா சாந்தி அடையட்டும் போபா; உன்னைப்போல் என்னை யாரும் நேசித்ததில்லை, நான் உன்னைப்போல் யாரையும் நேசிக்கவும் மாட்டேன். நீ இன்று உயிருடன் இல்லை என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. என் நினைவுகளில் நீ எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பாய். நீ என்னுடனேயே இருப்பது போன்ற உணர்வு எனக்குள் இருக்கிறது” எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும் அந்தப் பதிவில், “என்னை விட்டு ஏன் பிரிந்து சென்றாய்? உன்னுடன் இணைந்து உன் பிறந்தநாளையும், நமது திருமண நாளையும் கொண்டாட ஆசைப்பட்டேன். நீ இல்லாமல் நான் இல்லை. நாம் இருவரும் சேர்ந்து அடிக்கடி பல இடங்களுக்குப் பயணம் செய்ய வேண்டும் என்று பல கனவுகளைக் கண்டோமே பேபி” எனத் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். திரையுலகைச் சேர்ந்த பலரும், ரசிகர்களும் நடிகை சுபாஷினியின் மறைவிற்குத் தங்கள் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்காவின் இரண்டாம் பெண்மணியான உஷா வான்ஸ் குழந்தைகளுக்காக நடத்தும் 'ஸ்டோரிடைம் வித் தி செகண்ட் லேடி' என்ற சிறார் பாட்காஸ்ட்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் தோல்வியால் தான் சோர்வடையவில்லை என்றும், சோர்வு நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்ளும் தலைமைப் பொறுப்பு தனக்கு…
இண்டிகோ நிறுவனம் குறைந்த லக்கேஜுடன் பயணிப்பவர்களுக்காக 'இண்டிகோ லைட்' என்ற புதிய எகானமி கட்டண முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ்,…
உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையம் அருகே, ஒரு பெண் தனது மூன்று குழந்தைகளுடன் சுமார்…
மெக்சிகோ நாட்டின் ஜாலிஸ்கோ மாகாணத்தில் உள்ள லாகோஸ் டி மொரேனோ நகராட்சி உட்பட பல பகுதிகளில், மோட்டார் சைக்கிள் திருடர்கள்…
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு, போதைப்பொருட்கள் முற்றிலும் ஒழிக்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.…