“2 சீட்டுக்கு மேல் கிடையாது!” – ஐஜேகே-வுக்கு எடப்பாடி போட்ட அதிரடி முட்டுக்கட்டை.. அதிமுக கூட்டணியில் வெடித்த மோதல்!

Spread the love

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அண்மையில் மதுரையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பிரம்மாண்ட என்டிஏ பொதுக்கூட்டத்தைத் தொடர்ந்து, கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக முதற்கட்டப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டாலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பு மிகவும் கறாரான அணுகுமுறையைக் கையாண்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இக்கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ், ஐஜேகே, புதிய நீதிக் கட்சி உள்ளிட்ட சிறிய கட்சிகளின் தலைவர்கள் தங்களுக்கு விருப்பமான தொகுதிகளின் பட்டியலை எடப்பாடி பழனிசாமியிடம் அளித்துள்ளனர். இதில் புதிய நீதிக் கட்சி 6 தொகுதிகளைக் கோரிய நிலையில், அதிமுக தரப்பில் 2 தொகுதிகளுக்கு மட்டுமே பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது. இதேபோல் பாரிவேந்தரின் ஐஜேகே தரப்பில் 5 தொகுதிகள் கேட்கப்பட்டதற்கு, 2 தொகுதிகளுக்கு மேல் வாய்ப்பில்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தொகுதி எண்ணிக்கையில் மட்டுமல்லாமல், சின்னம் தொடர்பான விவகாரத்திலும் கூட்டணிக் கட்சிகளிடையே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. ஐஜேகே நிர்வாகிகள் அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட மறுத்து, தனிச் சின்னத்தில் தான் களம் காண்போம் எனப் பிடிவாதம் பிடித்துள்ளனர். மற்றொருபுறம், புதிய நீதிக் கட்சியோ இரட்டை இலைக்குப் பதிலாகத் தாமரைச் சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது. கூட்டணிக் கட்சிகளின் இத்தகைய மாறுபட்ட நிலைப்பாடுகள் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

மேலும், ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் தரப்பில் வைக்கப்பட்ட மாநிலங்களவை (ராஜ்யசபா) சீட் கோரிக்கையை அதிமுக தலைமை அதிரடியாக நிராகரித்துள்ளது. சட்டமன்றத் தேர்தலை முன்னிறுத்திச் சிறிய கட்சிகள் அதிக இடங்களைக் கேட்டு அழுத்தம் கொடுத்தாலும், அதிமுகவின் பலத்தைச் சிதறவிடாமல் இருப்பதில் இபிஎஸ் உறுதியாக உள்ளார். தொகுதிப் பங்கீட்டில் நிலவும் இந்த இழுபறி காரணமாக, வரும் நாட்களில் அதிமுக கூட்டணியில் சின்னங்கள் மற்றும் தொகுதிகள் தொடர்பாக மேலும் சில அதிரடி மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

Muthu Mani

Recent Posts

சுக்குநூறாக நொறுங்கிய லாரிகள்… துடித்துடித்து பலியான டிரைவர்கள்… கோர விபத்து…!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…

5 மணத்தியாலங்கள் ago

70 ஆண்டுகால மர்மம் முடிவுக்கு வருகிறது..! ஏலியன்கள் இருப்பது உண்மையா..? பொய்யா..? ரகசியங்களை உடைக்கப்போகும் ட்ரம்ப்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…

5 மணத்தியாலங்கள் ago

BREAKING : என்கிட்ட மோதாதே… வம்புக்கு இழுக்காதே… எதிர்கட்சியினரை அலறவிட்ட ஸ்டாலின்..!!

திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…

5 மணத்தியாலங்கள் ago

“என் அம்மா எனக்கு வேணும்” விபத்தில் உயிர் தப்பிய குழந்தை தாயை தேடி அழுத காட்சி.. ஒரே நாளில் மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த கொடூரம்..!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…

5 மணத்தியாலங்கள் ago

ஆண்களுக்கு அதிர்ச்சி, பெண்களுக்கு மகிழ்ச்சி…! மெனு-வில் இப்படியொரு ரகசியமா…? இளம்பெண் கொடுத்த ‘Men+U’ விளக்கம் சிரிப்பலைகளில் இணையம்…!

சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…

5 மணத்தியாலங்கள் ago

“அம்மா என்னை விட்டுடுங்க” பள்ளிக்கு அனுப்பக் கதவைத் தட்டிய குடும்பத்தினர்… வீட்டுக்குள் காத்திருந்த பயங்கர அதிர்ச்சி… பெற்ற தாயே செய்த் கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…

5 மணத்தியாலங்கள் ago