தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் சமீபத்தில் கரூரில் நடத்திய தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் விஜய்க்கு எதிராக பலரும் விமர்சித்து வந்தனர். இதனிடையே கரூர் துயர வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நீதிமன்றம் அமைத்த SIT குழு விசாரணை சிபிஐ க்கு மாற்றப்பட உள்ளது. இதற்கான அதிகாரிகளை விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். மேலும் சிபிஐ விசாரணையை கண்காணிப்பதற்கு ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் விசாரணை குழுவை அமைத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 15 நாட்களாக தலைமுறைவாக இருந்த தமிழக வெற்றிக்கழகம் இணை பொது செயலாளர் நிர்மல் குமார் வெளியே வந்தார். கரூர் சம்பவத்தில் பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் தலைமறைவாகிய நிலையில் தற்போது கரூர் வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டு விட்ட நிலையில் முதல் ஆளாக வெளியே வந்த நிர்மல் குமார் இரவு விஜயை சந்தித்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தியுள்ளார். இதனால் கட்சியின் அடுத்த கட்ட பணிகளை விஜய் தொடங்குவார் என்று தெரிகிறது.
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக…
திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த சிறுகளப்பூரைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவருடைய மனைவி செந்தமிழ்ச்செல்வி கடந்த ஜூன் 30-ம் தேதி இரவு…
ஆக்ரா மாவட்டம் மல்பூரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனௌலி காவலர் சாவடிக்கு பின்புறம் உள்ள சாக்கடையில், 17 வயதான சிவம்…
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவன், தான் படிக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை…
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் மீண்டும் ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. மான்யம் மாவட்டம் அனசபத்ராவில் உள்ள ஏகலவ்யா மாதிரி குடியிருப்புப்…
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை மீண்டும் அதிமுகவுடன் இணைக்க அதன் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.…