திருப்புவனத்தில் கோவில் காவலாளி அஜித் குமார் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உயிரிழந்த வாலிபர் அஜித்குமார் காரிலிருந்து தன்னுடைய 10 சவரன் நகை திருடிவிட்டதாக பேராசிரியர் ஆன நிகிதா புகார் அளித்ததன் பெயரில்தான் போலீசார் வழக்கு பதிவு செய்யாமலேயே வாய்மொழி உத்தரவின் பெயரில் அடித்து விசாரித்த போது தான் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். பேராசிரியை நிகிதா தன்னுடைய அதிகார செல்வாக்கை பயன்படுத்தி சென்னையில் உள்ள ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு பேசியதாகவும், அதன் பிறகு தான் அஜித்குமார் சட்டவிரோதமாக காவலில் வைத்து கடுமையாக தாக்கப்பட்டு விசாரணைக்கு உட்பட்டதாகவும் ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.
மேலும் நிகிதா மோசடி பேர் வழியாக வலம் வந்திருப்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த நிலையில் தான் நிகிதா பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையோடு இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி பேராசிரியராக பணியாற்றி வரும் நிகிதா தீவிர பாஜக ஆதரவாளராக செயல்பட்டு வந்தது அம்பலம் ஆகியுள்ளது. மேலும் பாஜக அண்ணாமலையின் தீவிர ஆதரவாளராக இருந்த அவர் அண்ணாமலையை பாராட்டி பல்வேறு பதிவுகள் வெளியிட்டுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் மருமகள் ஒருவர் தனது மாமியாரைக் கொடூரமாகத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னையில் மாதவரம் 200 அடி சாலையில், மாதவரம் ரவுண்டானா முதல் கொளத்தூர் சந்திப்பு வரையிலான இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்…
புதுக்கோட்டை மாவட்டம் திருநாளூர் வடக்கு கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் (26) என்பவர், தனது நண்பர்களாலேயே அடித்துக் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்ட…
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள பரபரப்பான சூழலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள் எழுந்துள்ள 'உள்' விவகாரங்கள் தொடர்பாகத் தலைவர்…
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சுமார்…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் (2026) திமுக தனது தேர்தல் அறிக்கையில் 'இல்லத்தரசி' என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ்,…