காவலாளி அஜித்குமார் லாக்அப் கொலை விவகாரத்தில் தொடர்புடைய நிகிதா மீது கல்லூரியிலும் பல புகார்கள் எழுந்து, கடந்தாண்டு அவர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியது தெரியவந்துள்ளது. திண்டுக்கல் அரசு மகளிர் கல்லூரி தாவரவியல் HOD ஆன நிகிதா, தனது பணிகளை முறையாக செய்யாதது, கல்லூரி நிர்வாகத்திற்கு கட்டுப்படாதது என அடுக்கடுக்கான புகார்களில் சிக்கி, அவரை இட மாற்றம் செய்ய மாணவிகள் கோரிக்கை வைத்திருந்துள்ளார்கள்.
இதன் அடிப்படையில் கடந்தாண்டு மே மாதம் கல்லூரிக் கல்வி இணை இயக்குநருக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியிருந்தார். அது தொடர்பாக விசாரணை நடத்திய இணை இயக்குநர், நிகிதா மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்து கல்லூரிக் கல்வி இயக்குநருக்கு விரிவான அறிக்கை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், தற்போது நடவடிக்கை எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
