அதிமுகவில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் முக்கிய நிர்வாகிகளின் விலகல் சம்பவங்கள் அக்கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. இன்று காலையில் திருவள்ளூர் முன்னாள் எம்பி வேணுகோபால் அதிமுகவிலிருந்து விலகிய நிலையில், தற்போது புதுக்கோட்டை மாநகர செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக அப்துல் ரகுமான் அறிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் நிழலாகவும், அவருக்கு மிகவும் நெருக்கமானவராகவும் வலம் வந்த அப்துல் ரகுமான், 35 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியில் தன்னுடன் பயணித்தவர்களுக்கும், இந்த பதவியை வழங்கிய தலைமைக்கும் நன்றி தெரிவித்து தனது சமூக வலைதள பக்கத்தில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கட்சியின் முக்கிய தூண்களாகக் கருதப்படும் மூத்த நிர்வாகிகள் அடுத்தடுத்து தங்களது பொறுப்புகளில் இருந்து விலகுவது அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் (Flipkart), நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் தங்களது பார்சல் சேவையை விரைவாக வழங்கும் நோக்கில்…
முசோரி மலைப்பகுதிக்குச் செல்லும் சாலையில், சுற்றுலாப் பயணிகள் காரிலிருந்து நெகிழி கழிவுகளை வெளியே வீசிய சம்பவமும், அதற்கு ஒரு சமூக…
மகாராஷ்டிர மாநிலம் பிம்ப்ரி-சின்ச்வாடி ராவேத் பகுதியில், பெண் நாய் ஒன்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், நடிகர் எனப் பல முகங்களுடன் வலம் வந்த உதயநிதி ஸ்டாலின், 'ஒரு கல் ஒரு…
மகாராஷ்டிர மாநிலத்தில் கள்ளக்காதல் விவகாரம் காரணமாக ஒரு பயங்கரமான கொலைச் சம்பவம் நடந்துள்ளது. ஒரு பெண், தனது சகோதரி மற்றும்…
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட மற்றும் தகுதியான புதிய பயனாளிகளைச் சேர்க்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாகத் தகவல்கள்…