ஐயோ, மனுஷன் உயிர் இப்படியா போகணும்?… கணவரோடு இரவில் பைக்கில் சென்ற புதுப்பெண்… நொடி பொழுதில் நடந்த சோக சம்பவம்…!

By Nanthini on புரட்டாதி 9, 2025

Spread the love

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பிடாரிச்சேரி புத்தூரை சேர்ந்த மதன் (30) என்பவருக்கு திருமணம் ஆகி சங்கீதா (27) என்ற மனைவி உள்ளார். கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்த நிலையில் பரமக்குடி வட்ட பாலம் அருகே உடற்பயிற்சி கூடம் நடத்தி வந்துள்ளனர். உடல் எடை குறைப்பு பயிற்சி கூடம் நடத்துபவர்களுக்கான கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் மதுரையில் நடந்துள்ளது.

அதில் மதன் மற்றும் சங்கீதா தம்பதியினர் கலந்து கொண்டே விளையாடினர். போட்டி முடிந்த பிறகு இருவரும் பைக்கில் மதுரையிலிருந்து பரமக்குடிக்கு சென்றனர். நள்ளிரவில் பரமக்குடி அருகே உள்ள கமுதகுடி நான்கு சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று பைக் நிலை தடுமாறி சாலையோர ஒரு பள்ளத்தின் தடுப்புச் சுவரியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பைக்கில் இருந்த கணவன் மனைவி பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தனர். பைக் மட்டும் பாலத்தில் விழுந்து கிடந்துள்ளது.

   

பள்ளத்தில் விழுந்ததில் சங்கீதாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மதனுக்கு கால் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.