சிவகங்கை மாவட்டம் எஸ் புதூரை அடுத்த குன்னத்தூர் களத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயியான மச்சக்காளை என்பவருடைய இரண்டாவது மகள் ரூபிகா (21). இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் ரெட்டையம்பட்டி கிராமத்தை சேர்ந்த பாண்டி என்பவருக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நடந்துள்ளது. பாண்டி திருச்சியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றார். இதனிடையே புதுமண தம்பதிகள் தல தீபாவளியை கொண்டாட அக்டோபர் 19ஆம் தேதி களத்துப்பட்டி கிராமத்திற்கு வந்துள்ளனர். குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடிய நிலையில் பாண்டி நேற்று தன் மனைவியிடம் வேலைக்கு செல்லப் போவதாக கூறியுள்ளார்.
தல தீபாவளி கொண்டாட வந்துவிட்டு உடனே ஏன் வேலைக்கு செல்ல வேண்டும் என்று ரூபிகா கேட்டுள்ளார். இருவருக்கும் இது சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டதால் பாண்டி நேற்று வேலைக்கு சென்று விட்டார். தான் அவ்வளவு சொல்லியும் கேட்காமல் கணவர் வேலைக்கு சென்றதால் மன வருத்தம் அடைந்த ரூபிகா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் திருமணம் ஆன மூன்று மாதத்தில் புதுமணப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…
தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…
பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…
மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…
மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…