தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று இரவு தாழ்வு மண்டலமாக வலுவடைந்ததாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது அடுத்த பன்னெண்டு மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அடுத்த 48
மணி நேரத்தில் புயலாக உருவெடுக்கும். இந்த புயலுக்கு ஏமன் நாடு பரிந்துரைத்த டிட்வா என்று பெயரிடப்படும். மேலும் புயலாக வலுப்பெற்ற பிறகு வட தமிழகத்தை நோக்கி நகரும் என்றும் இதனால் தமிழகத்தில் வடமலைக்கு வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
