இல்லத்தரசிகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பு.. உங்க போனில் இப்படி ஒரு செய்தி வருதா?.. அலர்ட்டா இருங்க..!

By Nanthini on ஆடி 9, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பாக அரசு என்னதான் எச்சரிக்கை விடுத்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம்தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி தொடர் மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக ஆன்லைன் மூலம் மோசடி சம்பவங்கள் அதிகரித்துவிட்டது. இப்படியான நிலையில் Local App இல் கதை படித்தால் தினமும் 700 ரூபாய் கிடைக்கும் எனக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் ஆசை வார்த்தை கூறி சிறிது சிறிதாக பணம் பெற்றதுடன், ஆரம்பத்தில் பணமும் கொடுத்தார்கள்.

பிறகு பெரிய அளவில் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டனர் என்று பாதிக்கப்பட்டவர்கள் வேதனையுடன் கண்ணீர் மல்க கூறியுள்ளனர். மொத்தம் 250க்கும் மேற்பட்டோர் ஏமாற்றப்பட்டதாகவும் பல கோடி ரூபாய் கையாடல் செய்யப்பட்டுள்ளதாகவும் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இதுபோன்ற போலி செய்திகளை நம்பி மக்கள் யாரும் ஆன்லைனில் ஏமாற வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று பலரும் வேலையில்லாமல் இருக்கும் நிலையில் செல்போன் மூலமாக ஏதாவது வேலை தேடிக் கொண்டிருக்க இது போன்ற செய்திகள் ஏதாவது கண்ணில் பட்டால் உடனே அதை நம்பி பணம் கிடைக்கும் என்ற ஆசையில் பணத்தை முதலீடு செய்ய தொடங்கி விடுகிறார்கள். இதனால் பின் நாட்களில் பெரும் இழப்பு ஏற்படும் என்பதற்கு இந்த சம்பவம் பெரிய உதாரணமாகும்.