இனி கஷ்டகாலத்துக்கு நகைக்கடன் வாங்குறது ரொம்ப கஷ்டம்…. இன்று (ஏப்..1) முதல் புதிய ரூல்ஸ்… மக்களுக்கு ஷாக் நியூஸ்…!

By Nanthini on சித்திரை 1, 2026

Spread the love

நகைக்கடன் விதிகளில் இன்று(ஏப்ரல் 1) முதல் அதிரடி மாற்றங்கள் அமலுக்கு வருவதால், பொதுமக்கள் தங்கள் நகையின் மதிப்பிற்கு ஏற்ப பெறும் கடன் தொகையில் கணிசமான வேறுபாடுகள் ஏற்படவுள்ளன. புதிய நடைமுறையின்படி, ₹2.5 லட்சம் வரையிலான மதிப்புள்ள நகைகளுக்கு அதன் மதிப்பில் 85% வரை (அதாவது அதிகபட்சமாக ₹2.12 லட்சம்) கடனாகப் பெற முடியும். நடுத்தர அளவிலான கடன்களுக்கு, அதாவது ₹2.50 லட்சம் முதல் ₹5 லட்சம் வரை மதிப்புள்ள நகைகளுக்கு 80% வரை கடன் வழங்கப்பட உள்ளது.

அதேசமயம் ₹5 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள பெரிய அளவிலான நகைகளுக்கு 75% மட்டுமே கடன் தொகையாக அனுமதிக்கப்படும். இந்த புதிய ஸ்லாப் முறையினால், அதிக மதிப்புள்ள நகைகளை அடமானம் வைப்பவர்கள் பெறும் கடன் அளவு சற்று குறைய வாய்ப்புள்ளதால், கடன் வாங்குவோர் இந்த விகிதாச்சார மாற்றங்களைக் கவனத்தில் கொண்டு திட்டமிடுவது அவசியமாகும்.