தங்கம் இறக்குமதியைக் குறைக்க மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, வணிகர்கள் ஒரு உரிமத்திற்கு (License) அதிகபட்சமாக 100 கிலோ தங்கம் மட்டுமே வரியின்றி இறக்குமதி செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தங்கம் தேவைப்படும் பட்சத்தில், அதற்குரிய வரியைச் செலுத்தி வணிகர்கள் தாராளமாக இறக்குமதி செய்துகொள்ளலாம்.
இந்த புதிய தங்கம் இறக்குமதி கட்டுப்பாட்டு விதிமுறையானது வணிகர்களுக்கு மட்டுமே பொருந்தும். கடைகளில் நேரடியாகச் சென்று தங்க நகைகள் வாங்கும் பொதுமக்களுக்குப் புதிதாக எந்தவொரு கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் எவ்விதத் தடையுமின்றி எப்போதும் போல நகைகளை வாங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
