பெண்களே..! ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை.. தமிழக அரசு வெளியிட்ட புதிய தகவல்..!!

By Soundarya on ஆவணி 28, 2025

Spread the love

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நடந்து கொண்டிருக்கும் நிலையில் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வாக்குறுதியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது. அதன்படி தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் தகுதி உள்ள பெண்கள் அனைவருக்கும் ஒவ்வொரு மாதமும் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் தகுதியான விடுபட்ட பெண்களுக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என கடந்த சட்ட சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக மகளிர் உரிமை தொகைக்கு விடுபட்டவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த முகாம்கள்  தொடங்கப்பட்டு இன்றோடு 45 நாள்களாகின்றது. இந்த முகாம்களில் பெறப்படும் மனுக்களுக்கு 45 நாள்களுக்குள் தீர்வு காணப்படும் எனமுதலமைச்சர் கூறியிருந்தார். அதன்படி, மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்தவர்களின் நிலை குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், அவர்களுக்கு அடுத்த மாதமே ரூ.1,000 டெபாசிட் செய்யப்படும் என கூறப்படுகிறது.