இன்றைய உலகம் டிஜிட்டல் மையமாக மாறிவிட்டதால் பண பரிவர்த்தனைகள் கூட டிஜிட்டல் முறையில் தான் நடக்கிறது. மக்கள் எல்லோரும் கையில் பணத்தை எடுத்துச் செல்வதில்லை எல்லாமே UPI பரிவர்த்தனைகள் தான் செய்கிறார்கள். இது ஒரு பக்கம் பாதுகாப்பான முறையாகவும் கருதப்படுகிறது. மேலும் தங்களது ட்ரான்ஸாக்ஷன்கள் ட்ரான்ஸ்பரெண்டாக இருக்கவும் இது உதவுகிறது. அவ்வப்போது இந்த UPI பரிவர்த்தனைகளில் மாற்றங்களும் புதுவித ரூல்ஸ்களும் வந்து கொண்டு தான் இருக்கிறது. தற்போது இந்த UPI பரிவர்த்தனையில் மாற்றம் ஒன்று நிகழ்கிறத. இதை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். இல்லையேல் உங்கள் UPI ID கூட செயல்படாமல் போகலாம்.
UPI பரிவர்த்தனைகளை குறித்து நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா NPCI ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. இந்தியாவின் டிஜிட்டல் பேமென்ட் இன் UPI பங்கு 83 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது. 2019 ஆம் ஆண்டு இது 34 சதவீதமாக இருந்தது. தற்போது ஐந்து வருடங்களில் 50 சதவீதத்திற்கும் மேலாக இது வளர்ந்து இருக்கிறது. கடந்த 2018ல் UPI பணபரிமாற்றம் 375 கோடியாக இருந்த நிலையில் தற்போது 2024 இல் அதுக்கு 17, 221 கோடியாக உயர்ந்திருக்கிறது.
இப்படி இருக்கும் நிலையில் பிப்ரவரி ஒன்றாம் தேதி இன்று முதல் UPI பயன்பாட்டில் ஒரு பெரிய மாற்றம் நிகழப்போவதாக NPCI எனப்படும் நேஷனல் பேமண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அறிவித்து இருக்கிறது. அவர்களின் அறிக்கையின்படி UPI பரிவர்த்தனை ஐடிகளில் சிறப்பு எழுத்துக்கள் பயன்படுத்துவதை தடை செய்து எண்ணெழுத்து எழுத்துக்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறது.
உங்களது UPI ID யில் எண்களில் ஒன்று முதல் 9 வரையிலும் ஆங்கில எழுத்துக்களில் A-Z வரையிலும் பயன்படுத்தலாம். அதேநேரம் ஸ்பெஷல் கேரக்டர்களை பயன்படுத்தக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இவற்றை செயல்படுத்தாத UPI ஐடிகளின் பண பரிவர்த்தனைகள் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் தானாகவே நிறுத்தப்படும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.
அதேபோல் UPI பரிவர்த்தனைகள் மூலம் ஏற்படும் மோசடிகளை தடுக்க UPI பயனாளர்கள் அவ்வப்போது தங்களது ஆப்பிணை குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதனால் நீங்கள் உங்கள் யூபிஐ ஐடியில் குறிப்பிட்ட இந்த தகவல் மூலம் உங்கள் ஐடி இல்லாவிட்டால் உடனடியாக அதை மாற்றம் செய்து கொள்ளுங்கள்.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…