Categories: இந்தியா

“90 லட்சம் கொடு…. இல்லன்னா தொட முடியாது…” முதலரவில் கணவருக்கு ‘செக்’ வைத்த புதுப்பெண்…! பகீர் சம்பவம்…!!

Spread the love

உத்திரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் நடைபெற்ற ஒரு திருமண உறவு, அதன் முதல் இரவிலேயே பேரதிர்ச்சியாக மாறியுள்ளது. மணமகன் கௌரவ் தனது மனைவியின் முகத்திரையை விலக்க முயன்றபோது, அதற்குப் பதிலாக 90 லட்சம் ரூபாய் ரொக்கம் தர வேண்டும் என கல்பனா நிபந்தனை விதித்துள்ளார்.  இல்லையெனில் தாம்பத்திய உறவுக்கு இடமில்லை எனத் திட்டவட்டமாகக் கூறி கணவரை அவமானப்படுத்தியுள்ளார்.

அதோடு நிறுத்தாமல், தனது பிறந்த வீட்டு உறுப்பினர்களுடன் இணைந்து புகுந்த வீட்டிலிருந்த விலை உயர்ந்த நகைகளைச் சுருட்டிக்கொண்டு தப்பியோடிய அந்தப் பெண், தனது தந்தை மற்றும் சகோதரர்களின் பேராசைக்காகத் தொடர்ந்து பணத்தைக் கேட்டு கணவர் குடும்பத்திற்குத் தொடர் கொலை மிரட்டல்களை விடுத்து வந்துள்ளார்.

இந்த விவகாரம் கடந்த மார்ச் மாதம் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், கல்பனாவின் குடும்பத்தினர் கௌரவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து முதியவர்கள் உட்பட அனைவரையும் அறையில் பூட்டிச் சிறைபிடித்தனர். இரண்டு மணி நேரத்திற்குள் 90 லட்சம் ரூபாய் வராவிட்டால் ஒட்டுமொத்த குடும்பத்தையும் உயிரோடு எரிப்போம் என மிரட்டியதுடன், வீட்டில் இருந்த எரிவாயு குழாயைச் சிதைத்து அதனை விபத்து போலக் காட்டச் சதித் திட்டம் தீட்டியுள்ளனர்.

நல்வாய்ப்பாகக் காவல்துறையினர் சரியான நேரத்தில் விரைந்து வந்து அந்தக் குடும்பத்தை மீட்ட நிலையில், பணத்தைப் பறிப்பதற்காகவே திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த மோசடித் திருமணத்தின் பின்னணியில் திருமணத் தரகரும் உடந்தையாக இருப்பது தற்போது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Devi Ramu

Recent Posts

வகுப்பறையா..? படுக்கை அறையா..? படுத்துக்கொண்டு ஹாயாக ரீல்ஸ் பார்க்கும் ஆசிரியை… அரசுப்பள்ளியில் நடந்த அதிர்ச்சி..!!

சமஸ்திபூர் மாவட்டம் சக் சாஹோ பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், வகுப்பறையின் பின் வரிசை மேஜை மீது படுத்துக்கொண்டு ஆசிரியை…

3 minutes ago

அட்சய திருதியை 2026… தங்கம் வாங்குவதை விட பல மடங்கு பலன் தரும் ‘இந்த’ 3 பொருட்கள்… உடனே இத வாங்கி வைங்க…!

அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடமும் மேலோங்கி இருக்கிறது. ஆனால், "அட்சயம்" என்பதற்கு குறையாதது…

5 minutes ago

“மட்டன் வேகவே இல்லை” நண்பனின் முன் மனைவியை கேவலமாக திட்டிய கணவர்… மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு..!!!

யவத்மால் மாவட்டத்தின் ஆர்னி தாலுகாவில் உள்ள போர்கான் கிராமத்தில் வசித்து வந்த மனோஜ் என்பவர், தனது நண்பரை இரவு உணவிற்காக…

5 minutes ago

“கொலை செய்துவிட்டேன்” பிணத்தின் அருகே அமர்ந்து கதறல்… காம வெறிக்கு பலியான பாசம்..? ஹோட்டலில் மாமாவை துடிக்க துடிக்க சிதைத்த இளம்பெண்..!!!

ஆக்ராவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம் கேட்போர் நெஞ்சைப் பதற வைத்துள்ளது. தனது…

8 minutes ago

“முந்திரி தோப்பில் கொன்று புதைக்கப்பட்ட பெண்”… உல்லாசமாக இருந்த காதலன் செய்த கொடூரம்… நள்ளிரவில் நடந்த பயங்கரம்..!

புதுச்சேரி வில்லியனூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு, முந்திரி தோப்பில் புதைக்கப்பட்ட சம்பவம்…

15 minutes ago

ஷாக்கிங் வீடியோ: மகளுக்குப் பக்கத்தில் காதலன்.. ஆத்திரத்தில் கத்தியை உருவிய தந்தை! நடுநடுங்க வைத்த ஆணவத் தாக்குதல் முயற்சி..!!

கல்லூரி வளாகத்தில் கூட்டம் ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்த வரிசையில் தந்தை அமர்ந்திருக்க, அவருக்கு அடுத்த இருக்கையில் அவருடைய மகளும், மகளுக்கு…

15 minutes ago