இனி கோடம்பாக்கத்திற்கு புதியவர்கள் இயக்குனர் ஆகணும்னு தான் வருவாங்க… எல்லாத்துக்கும் காரணம் நெல்சன் தான்…

By admin on மாசி 13, 2025

Spread the love

நெல்சன் திலிப்குமார் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனராக இருக்கிறார். 2018 ஆம் ஆண்டு கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் நெல்சன் திலிப்குமார். முதல் படமே அவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது.

   

அடுத்ததாக 2021 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படமும் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு பீஸ்ட் 2023 ஆம் ஆண்டு ஜெயிலர் ஆகிய வெற்றி படங்களை இயக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் நெல்சன்.

   

அதைத்தொடர்ந்து இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் என்ற Bloody Begger என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார் நெல்சன் திலிப்குமார். தற்போது ஜெயிலர் 2 படத்தை எடுத்து வருகிறார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் தற்போது சினிமா வட்டாரங்களில் நெல்சனை பற்றி பல பேச்சுக்கள் நிலவி வருகிறது.

 

அது என்னவென்றால் ஜெயிலர் 2 படத்திற்குப் பிறகு நெல்சன் திலிப் குமார் ஜூனியர் NTR ஐ வைத்து தெலுங்கு மற்றும் தமிழ் இரண்டு மொழிகளிலும் ஒரு படத்தை இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கு அட்வான்ஸ் மட்டுமே 50 கோடி பெற்றிருக்கிறார் நெல்சன். இது சினிமா வட்டாரங்களில் பெரும் பேச்சுப் பொருளாக இருக்கிறது. இதை அறிந்த பலர் இனிமேல் சினிமாவிற்கு யாரேனும் புதிதாக வந்தால் அவர்கள் நடிகராக விரும்ப மாட்டார்கள் இயக்குனராகத்தான் விரும்புவார்கள். ஏனென்றால் நடிகர்களுக்கு ஒன்னு ரெண்டு படங்கள் ஓடவில்லை என்றால் மார்க்கெட் டவுன் ஆகிவிடும். ஆனால் இயக்குனர்களுக்கு அப்படி இல்லை சம்பளமும் அதிகம் மவுசும் கூடுகிறது என்று பேசி வருகிறார்கள்.