இந்தியாவில் அதிநவீன ரயில்கள் அதிகமாக பயன்பாட்டில் உள்ளது. அதிநவீன ரயில்களில் ஒன்றுதான் பாரத் எக்ஸ்பிரஸ் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் 24, 2023 ஆண்டு நெல்லை மாவட்டத்தில் இருந்து நெல்லை மற்றும் சென்னைக்கு இடையே பாரத் சேவை தொடங்கப்பட்டது. நெல்லையிலிருந்து விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், உள்ளிட்ட நகரங்களை இணைக்கும் வகையாக இந்த ரயில் வாரத்தில் 6 தினங்கள் செவ்வாய்க்கிழமையை தவிர மற்ற நாட்களில் இயக்கப்பட்டு வருகிறது.
ஆரம்பத்தில் 8 பெட்டிகளுடன் இயங்கிய ரயில், கடந்த ஜனவரி 15ஆம் தேதியிலிருந்து 16 பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது. அனைத்து பெட்டியுமே ஏசி பெட்டிகளாம். தென் மாவட்ட பயணிகளுக்கு மத்தியில் பெரும் வரவேற்பை கொண்டுள்ளது. பெட்டிகளை இருவதாக அதிகரிக்க தெற்கு ரயில்வே முடிவெடுத்துள்ளது. தற்போது ஆரஞ்சு கலர் 20 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் நெல்லையில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.
