அம்மாவின் பாசத்திற்காக நடக்கும் சண்டை… கல்யாணம் பண்ணி வைங்க சார்… நீயா நானா அரங்கத்தை அலறவிட்ட பெண்… வைரலாகும் ப்ரோமோ…!

By Nanthini on மார்கழி 12, 2025

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாக கூடிய மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் நீயா நானா. பல வருடங்களாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகின்றார். மற்ற நிகழ்ச்சிகளுடன் ஒப்பிடும்போது இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஒவ்வொரு வாரமும் இந்த நிகழ்ச்சியில் புதிதாக ஏதாவது ஒரு தலைப்பு கொண்டே விவாதம் நடைபெறும். இப்படியான நிலையில் இந்த வாரம் ஒளிபரப்பாக இருக்கும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

   

அதாவது இந்த வாரம் திருமணமான அக்கா மற்றும் திருமணமான தங்கை இருவருக்கும் இடையில் அம்மாவின் பாசத்திற்கு போட்டி என்ற தலைப்பில் விவாதம் நடந்துள்ளது. இரண்டு மகள்களை கொண்ட பெற்றோரில் தாய் எந்த மகளுடன் இருப்பதற்கு விரும்புகிறார். யார் அவரை நன்றாக பார்த்துக் கொள்கிறார்கள் என்பதை கொண்டு விவாதம் நடந்துள்ளது. அதில் அரங்கில் இரண்டு மகள்களுக்கு இடையே மாட்டிக்கொண்ட தாய் எந்த உரை பதிலும் அளிக்க முடியாமல் தவிக்கின்றார். மிகவும் சுவாரசியமாகச் சென்ற இந்த நிகழ்ச்சியில் பெண் ஒருவர் தன்னுடைய தங்கையிடம் கல்யாணம் செய்ய சொல்லுங்க சார் என்று கோபிநாத்திடம் கூறி அரங்கை அதிர வைத்துள்ளார். தற்போது அதை தொடர்பான ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.