தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. நடிகர்களுக்கு இணையாக சம்பளம் பெறும் ஸ்டார் நடிகையாக பலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் இறுதியாக ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இந்த படத்தின் பிரமோஷனுக்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் நயன்தாரா கணக்கு தொடங்கிய நிலையில் பல புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய தொழிலை தொடங்கப் போவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். இவரின் இந்த பதிவானது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. நடிகை நயன்தாரா ஏற்கனவே Lip Balm Company என்று லிப்ஸ்டிக் பொருளை விற்பனை செய்யும் தொழிலை செய்து வருகிறார்.
தற்பொழுது தனது அழகு சாதன பிஸ்னஸில் அடுத்தபடியாக அடுத்த கட்டத்தில் இறங்கி இருக்கும் நயன்தாரா தற்போது சரும பிராடக்டுகளில் இறங்கி இருக்கிறார்.
இதற்காக அவர் 9skin என்ற அடுத்த நிறுவனத்தை தற்பொழுது தொடங்கி உள்ளார். நயன்தாராவின் 9ஸ்கின் நிறுவனம் தற்போது, ஆன்டி ஏஜ் சீரம், நைட் கிரீம், டே கிரீம் உட்பட மொத்தம் 5 பொருட்களை லாஞ்ச் செய்துள்ளனர். எல்லா பொருட்களுமே 1000 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று செப்டம்பர் 29-ந் தேதி இந்த பொருட்களுக்கான விற்பனையை மலேசியாவில் தொடங்கி உள்ளனர். இதற்கான லாஞ்சில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதில் வெல்வெட் உடையில் நயன்தாரா, கணவர் விக்கியுடன் வேற லெவல் அழகில் ஜொலிக்கும் புகைப்படங்கள் வைரலாக்கப்பட்டு வருகிறது.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…