பொதுவாகவே கொசுக்களிடம் இருந்து தப்புவது என்பது ஒரு சவாலான காரியம் தான். நாம் என்னதான் எச்சரிக்கையாக இருந்தாலும் கொசுக்கடியில் இருந்து யாராலும் தப்ப முடியாது. இந்த கொசுக்கள் மூலமாக டெங்கு மற்றும் மலேரியா போன்ற உயிரை பறிக்கக் கூடிய ஏராளமான நோய்கள் அதிவேகமாக பரவுகிறது.
![]()
மழைக்காலம் நெருங்கி விட்டதால் கொசுக்களிடம் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதற்காக கேடு விளைவிக்க கூடிய கொசு விரட்டிகளை நாம் பயன்படுத்தக் கூடாது. அவை கொசுக்களை விரட்டினாலும் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். அதனால் இயற்கையான முறையில் கொசுக்களை விரட்டியடிக்க முயற்சிக்கலாம்.
- முதலில் மாட்டு சாணத்தை எரிப்பதன் மூலமாக வரக்கூடிய புகையில் ஈக்கள், கொசுக்கள் மற்றும் பிற பூச்சிகள் விரட்டியடிக்கப்படும். இதனை ஒருமுறை எரிப்பது குறைந்தபட்சம் 8 முதல் 10 மணி நேரம் வரை புகையை வெளியேற்றும்.
- அடுத்ததாக சிட்ரோல்லா எண்ணையை நம்முடைய சருமத்தில் நேரடியாக தடவுவதன் மூலம் கொசுக்களை விரட்டலாம். இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை இதனை பயன்படுத்துவது பயனளிக்கும்.
- சாம்பிராணியை பயன்படுத்தி பூச்சிகள் மற்றும் கொசுக்களை விரட்டலாம். இந்த புகை நம்முடைய உடலுக்கு தீங்கு விளைவிக்காது.
- எலுமிச்சை யூகலிப்டஸ் எண்ணெய் சிறந்த கொசு விரட்டியாக செயல்படுவதால் இதனை பயன்படுத்துவதற்கு முன்பு வேறு ஏதேனும் கேரியர் எண்ணெயில் கலந்து அதன் பிறகு பயன்படுத்த வேண்டும். ஆனால் இதனை சருமத்தில் அப்ளை செய்வதற்கு முன்னர் ஒருமுறை பேட்ச் டெஸ்ட் செய்து கொள்வது நல்லது.
