தமிழகத்தில் அடுத்த வருடம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. அதேசமயம் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் முயற்சியிலும் டெல்லி தலைமை தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய்யை தங்கள் கட்சியில் இணைக்கும் முயற்சி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக இபிஎஸ் தொடர்ந்து விஜய் இடம் பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில் சமீபத்தில் கூட கூட்டணிக்கு பிள்ளையார் சூழலில் போடப்பட்டு விட்டதாக சூசகமாக தெரிவித்திருந்தார். ஆனால் சமீபத்தில் தமிழக வெற்றிக்கழகம் நடத்திய பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் விஜய் தான் என அறிவிக்கப்பட்டு விட்டது. இதனால் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது ஏறத்தாழ உறுதியாகி உள்ளது.
இந்நிலையில் 10 படங்கள் நன்றாக ஓடினாலே முதல்வர் ஆகலாம் என்ற மாயையில் யார் யாரோ புதிதாக கிளம்பியுள்ளனர் என்று நடிகர் விஜய்யை நத்தம் விஸ்வநாதன் மறைமுகமாக சாடியுள்ளார். புதிதாக கட்சி தொடங்கியவுடன் நான் தான் முதல்வர் என கூறுவதைப் பற்றி மக்கள் ஆழமாக சிந்திக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். முன்னதாக முன்னாள் அமைச்சர் கே பி முனுசாமியும் சினிமா மாயையில் சிலர் கிளம்பி உள்ளதாக விஜயை விமர்சித்திருந்தது கவனிக்கத்தக்கது.
