மீண்டும் வருகிறது 1997 பேரழிவு..? “தலைகீழாக மாறப்போகும் உலக வானிலை” பசிபிக் பெருங்கடலில் நாசா கண்டறிந்த ஆபத்து..!!

By Soundarya on ஆனி 23, 2026

Spread the love

பசிபிக் பெருங்கடலில் கடல் மட்டமும், வெப்பநிலையும் மிக வேகமாக உயர்ந்து வருவதை நாசாவின் ‘Sentinel-6’ செயற்கைக்கோள் கண்டறிந்துள்ளது. இது ‘சூப்பர் எல் நினோ’ (Super El Nino) நிகழ்வு தொடங்கியதன் அறிகுறி என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இதன் காரணமாக உலகளாவிய வானிலை தலைகீழாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, கடந்த 1997-98 ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஏற்பட்டது போன்ற ஒரு தீவிரமான வானிலை மாற்றம் உலக நாடுகளில் மீண்டும் நிகழலாம் எனக் கூறப்படுகிறது. இதனால் உலகின் பல பகுதிகளில் பெரும் வெள்ளப்பெருக்கும், சில பகுதிகளில் கடுமையான வறட்சியும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.