தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அடுத்த வருடம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு தீவிரமாக தயாராகி வருகிறார். கடந்த மாதம் செப்டம்பர் திருச்சியில் தன்னோட சுற்றுப்பயணத்தை தொடங்கிய அவர் நாகப்பட்டினம், திருவாரூர், கரூர் பகுதிகளில் மக்களை சந்தித்தார். கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தார்கள். இந்த சம்பவத்துக்கு பிறகு அவருடைய சுற்றுப்பயணம் தள்ளி வைக்கப்பட்டது. இதனையடுத்து TVK சார்பாக அரங்க கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அதில் மட்டுமே விஜய் பங்கேற்றார். காஞ்சிபுரத்தில் கடந்த மாதம் 2000 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டதில் கலந்து கொண்டு பேசினார். இதற்கிடையில் விஜய் கட்சியில் செங்கோட்டையன், அடுத்ததாக நாஞ்சில் சம்பத் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாஞ்சில் சம்பத், திமுகவை விட தவெகவின் தேர்தல் பணிகள் சிறப்பாக இருப்பதாக உள்ளது. தவெக அலுவலகம் பிரமாதமாக உள்ளதாக கூறிய அவர், அறிவாலயம் சுடுகாடு மாதிரி இருக்கும் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். மேலும், தவெக அலுவலகத்தில் 400க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் மடிக்கணினி வைத்து தேர்தலுக்கான பணியை செய்துவருவதாகவும் தெரிவித்துள்ளார்.
