பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற நந்தினி அந்த நிகழ்ச்சி உடனடியாக தடை செய்ய வேண்டும் என ஆவேசமாக பேசியுள்ளார். விஜய் சேதுபதி பற்றி பேசிய நந்தினி போட்டியாளரை அவர் சமமாக மதிப்பதில்லை, அவர்களின் கருத்துக்களை கேலி செய்து அவமானப்படுத்துகிறார் என குற்றம் சாட்டியுள்ளார்.
கமல் இருந்தவரை கண்ணியமாக இருந்த நிகழ்ச்சி தற்போது தனிநபர் தாக்குதல்கள் நிறைந்த இடமாக மாறிவிட்டது. பிக் பாஸில் கலந்து கொண்டதற்காக வெட்கப்படுகிறேன். என்னை சதி செய்து வெளியே அனுப்பி விட்டார்கள். இன்றைக்கு பார்வதி கமருதீன் வாழ்க்கை வீணாகிவிட்டது. அனைத்தையும் கட் பண்ணி போடுறாங்க. இது ரியாலிட்டி ஷோவே கிடையாது. அதனாலதான் நான் கெத்தா வெளியே வந்தேன் என நந்தினி கூறியுள்ளார்.
