தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தேர்தல் பிரச்சாரம் என தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நயினார் , “இந்து மதத்தை இழிவுபடுத்தவில்லை என்று திமுகவினரால் சத்தியம் செய்ய முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் தமிழகம் கவர்னருடன் தான் போராடுகிறது என உதயநிதி கூறியதற்கு கண்டனம் தெரிவித்த அவர் RN ரவியை விமர்சிப்பதற்கு உதயநிதி ஸ்டாலினுக்கு என்ன தகுதியுள்ளது என்றும் காட்டமாக கேட்டுள்ளார். கவர்னர் மீது இனியும் வீண் குற்றச்சாட்டுக்களை சுமத்தினால் பாஜக வேடிக்கை பார்த்து கொண்டு இருக்காது என்று எச்சரித்துள்ளார்.
