Connect with us

சிவாஜியை திருடன் என சொல்லிவிட்டு எதையெதையோ சொல்லி சமாளித்த நாகேஷ்!… ஆனா நடிகர் திலகத்தின் ரியாக்‌ஷன்தான் செம்ம!

CINEMA

சிவாஜியை திருடன் என சொல்லிவிட்டு எதையெதையோ சொல்லி சமாளித்த நாகேஷ்!… ஆனா நடிகர் திலகத்தின் ரியாக்‌ஷன்தான் செம்ம!

தமிழ் சினிமாவில் தன்னுடைய வித்தியாசமான உடல்மொழி மற்றும் நகைச்சுவை தெறிக்கும் வசனங்கள் மூலமாகக் கலக்கியவர் நாகேஷ். 20 ஆண்டுகளுக்கு மேலாக இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். அவரை தமிழ் சினிமாவின் சார்லி சாப்ளின் என்றும் சொல்வர். கவுண்டமணி வருகைக்குப் பிறகும் பல படங்களில் நகைச்சுவை, வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.

அவர் தன்னுடைய மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்த போது கிட்டத்தட்ட அனைத்து தமிழ் படங்களிலும் நடித்தார். ஒரு நாளைக்கு ஷிஃப்ட் கணக்கில் ஐந்து படங்களில் கூட நடித்துள்ளார். இதனால் எந்த பட ஷூட்டிங்குக்கும் அவரால் சொன்ன நேரத்தில் செல்ல முடியாதாம். அதனால் அவர் வர தாமதமானால் எம் ஜி ஆர், சிவாஜி கூட அவருக்காக காத்திருக்க வேண்டிய சூழல் உருவானதாம்.

அப்படி ஒரு படப்பிடிப்புக்கு நாகேஷ் லேட்டாக சென்றுள்ளார். வழக்கம் போல சரியான நேரத்துக்கு வந்திருந்த சிவாஜி, நாகேஷுக்காக காத்திருந்தாராம். லேட்டாக சென்ற நாகேஷை அனைவரும் ஒரு மாதிரி பார்த்துள்ளனர். அதைப் பார்த்த நாகேஷ் குருட்டாம் போக்கில் “என்ன திருடன்(சிவாஜி) வந்துட்டானா?” என துடுக்குத் தனமான கேட்டுள்ளார். சொல்லிவிட்டு திரும்பி பார்த்தால் சிவாஜி அவரைப் பார்த்துக் கொண்டிருந்தாராம்.

   

அப்போது தான் சொன்ன வார்த்தை எவ்வளவு மோசமானது என்பதை நாகேஷ் உணர்ந்துள்ளார். ஆனால் சிவாஜியை சமாளிக்க வேண்டும் என்பதற்காக “அண்ணன். நீங்க நடிச்ச திருடன் படம் பார்த்தேன். பிரமாதமா பண்ணிட்டீங்க. இனிமேல் நீங்க பராசக்தி சிவாஜி இல்ல, இனிமே திருடன் சிவாஜிதான்” என சொல்லி சமாளித்துள்ளார்.

 

நாகேஷ் சமாளிக்கிறார் என்பது தெரிந்தும் சிவாஜி, அவர் மீது கோபம் கொள்ளவில்லையாம். ஆனால் நீண்ட நாட்களுக்கு தான் அந்த வார்த்தையை சொன்னது குறித்து நாகேஷ் குற்றவுணர்வில் இருந்தாராம். தன்னுடைய நண்பர்களிடம் தன்னுடைய தவறை சொல்லி புலம்பினாராம்.

Continue Reading
To Top