தன் பட ஷூட்டுக்கு வராமல் எம் ஜி ஆர் பட ஷூட்டிங்குக்கு சென்ற நாகேஷ்… அதுக்கு அவர் சொன்ன காரணத்தைக் கேட்டு கடுப்பான பாலச்சந்தர்!

By vinoth on ஜூலை 25, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் தன்னுடைய வித்தியாசமான உடல்மொழி மற்றும் நகைச்சுவை தெறிக்கும் வசனங்கள் மூலமாகக் கலக்கியவர் நாகேஷ். 20 ஆண்டுகளுக்கு மேலாக இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். அவரை தமிழ் சினிமாவின் சார்லி சாப்ளின் என்றும் சொல்வர். கவுண்டமணி வருகைக்குப் பிறகும் பல படங்களில் நகைச்சுவை, வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.

அவர் தன்னுடைய மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்த போது கிட்டத்தட்ட அனைத்து தமிழ் படங்களிலும் நடித்தார். ஒரு நாளைக்கு ஷிஃப்ட் கணக்கில் ஐந்து படங்களில் கூட நடித்துள்ளார். இதனால் எந்த பட ஷூட்டிங்குக்கும் அவரால் சொன்ன நேரத்தில் செல்ல முடியாதாம். அதனால் அவர் வர தாமதமானால் எம் ஜி ஆர், சிவாஜி கூட அவருக்காக காத்திருக்க வேண்டிய சூழல் உருவானதாம்.

   

அப்படிதான் ஒருமுறை பாலச்சந்தர் பட ஷூட்டிங்குக்கு வராமல் மட்டம் போட்டுள்ளார் நாகேஷ். அப்போது பாலச்சந்தர் வெள்ளி விழா என்ற படத்தை இயக்கிக் கொண்டிருந்தார். இந்த படத்தில் ஜெமினி கணேசன், மனோரமா, வாணிஸ்ரீ போன்ற பிரபலங்களும் நடித்து வந்தனர். இந்த படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க நாகேஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.

   

ஷூட்டிங் அன்று நாகேஷ் வராததால் மேனேஜரிடம் ‘ஏன் நாகேஷ் வரவில்லை’ என்று கேட்டுள்ளார். அதற்கு மேனேஜர் ‘நாகேஷ் இன்று எம் ஜி ஆர் பட ஷூட்டிங்குக்கு சென்றுவிட்டார். அந்த படத்தின் இயக்குனரே வந்து அழைத்ததால் அங்கு போய்விட்டார். நீங்கள் வந்து அழைத்திருந்தால் நம் படத்துக்கு வந்திருப்பேன் என சொன்னார்.’ என்று கூறியுள்ளார்.

 

அதைக் கேட்டு கோபத்தின் உச்சிக்கே சென்ற பாலச்சந்தர் “என்னது நாகேஷை அழைக்க நானே போக வேண்டுமா!” என்று அந்த படத்தில் இருந்து நாகேஷையே தூக்கிவிட்டு தேங்காய் சீனிவாசனை ஒப்பந்தம் செய்துவிட்டாராம். இந்த பிரச்சனை காரணமாக மூன்று வருடங்கள் இருவரும் பேசாமலும் ஒரே படத்தில் இணைந்து பணியாற்றாமலும் இருந்துள்ளனர். அதன் பின்பு பாலச்சந்தர் முன்வந்து தன்னுடைய அபூர்வ ராகங்கள் படத்தில் நாகேஷை நடிக்க வைத்தார்.