புதுச்சேரியில் நடைபெற்ற பள்ளி விழா ஒன்றில், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் அரசியல் கலந்த சுவாரசியமான கருத்து ஒன்று மேடையிலேயே முன்வைக்கப்பட்டுள்ளது. அந்த விழாவில், புதுச்சேரி தற்காலிக சபாநாயகரும் அதிமுக நிர்வாகியுமான அன்பழகன் பேசுகையில், வழக்கமாக தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் தலைவர்கள்தான் புதுச்சேரியை ஆள்வார்கள், அவர்களை நாங்கள் அவதார புருஷர்களாகவே பார்ப்போம்.
ஆனால், இந்த முறை புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்குச் சென்ற N.ஆனந்த், ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே தன் திறமையால் ஆட்டிப்படைக்கும் ஒரு பெரும் சக்தியாக உருவெடுத்துள்ளார்” என்று மேடையில் ஆனந்த் முன்னிலையிலேயே வெகுவாகப் பாராட்டிப் பேசியுள்ளார். இந்தத் துணிச்சலான மற்றும் பெருமிதமான பேச்சு தற்போது அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைத்தளங்களிலும் பெரும் விவாதத்தையும் பரவபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
