நள்ளிரவில் பயங்கரம்…!! “சொன்னப்போ கேக்கல.. இப்போ உயிர் போயிருச்சு…” விவசாயிக்கு நடந்த கொடூரம்… உறவினர்களின் பரபரப்பு குற்றச்சாட்டு…!!

By Devi Ramu on பங்குனி 10, 2026

Spread the love

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூரில், ஆறுமுகவேல் (63) என்ற விவசாயி தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். இரவு நேரத்தில் அங்கு வந்த அந்த மர்ம நபர்களுக்கும், அவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், அவர்கள் முதியவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பினர். ரத்த வெள்ளத்தில் கிடந்த விவசாயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தகவலறிந்து வந்த கரிவலம்வந்தநல்லூர் காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா எனப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், முன்னதாகத் தாங்கள் அளித்த புகார்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காததே இந்த உயிரிழப்புக்குக் காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தற்போது, இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரை போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.