பெண்களே எச்சரிக்கை… மோட்டார் சைக்கிளில் வந்து கைவரிசை காட்ட முயன்ற வாலிபர் சிக்கியது எப்படி?… காவல்துறையின் அதிரடி நடவடிக்கை… வைரலாகும் வீடியோ…!!!

By Rajeshwari on பங்குனி 10, 2026

Spread the love

இலங்கை, வென்னப்புவ பகுதியில் நேற்று மாலை 18 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் அவரது தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றுள்ளார். இதன்போது ஏற்பட்ட போராட்டத்தினால் இரு வாகனங்களும் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின. சுதாரித்துக்கொண்ட அந்தப் பெண் உதவி கேட்டு சத்தமிடவே, அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் உடனடியாக விரைந்து வந்து திருடனைத் தப்பவிடாமல் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர்.

மேலும் பொதுமக்களின் இந்தத் துரித செயலும் விழிப்புணர்வும் ஒரு பெரும் குற்றத்தைத் தடுத்து நிறுத்தியுள்ளது. பிடிபட்ட நபர் மல்வத்தை வீதியைச் சேர்ந்த 29 வயதுடைய வி.ஜே. பாஸ்கு என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த வென்னப்புவ காவல்துறையினர் சந்தேக நபரையும், அவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பொறுப்பேற்றுள்ளனர்.

   

“>

   

தற்போது அவர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காகக் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார். ஆபத்தான சூழலிலும் தைரியமாகச் செயல்பட்ட அந்தப் பெண்ணின் துணிச்சலும், அவருக்குத் தோள் கொடுத்த பொதுமக்களின் மனிதாபிமானமும் சமூக வலைதளங்களில் பெரிதும் பாராட்டப்பட்டு வருகின்றன.