கர்நாடக மாநிலம் சாமராஜநகரில் உள்ள ஒரு ஹவுசிங் போர்டு குடியிருப்பில், பெண்களின் உள்ளாடைகளைத் திருடி அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபடும் மர்ம நபர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக வீடுகளுக்கு வெளியே உலர்த்தப்படும் பெண்களின் உள்ளாடைகள் மர்மமான முறையில் காணாமல் போயின. இது குறித்து குடியிருப்பாளர்கள் சந்தேகமடைந்து அங்குள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒரு நபர் நள்ளிரவில் பெண் வேடமிட்டு வந்து இச்செயலில் ஈடுபடுவது வெளிச்சத்திற்கு வந்தது.
அந்த மர்ம நபர் திருடிய உள்ளாடைகளை அங்கேயே அணிந்து கொண்டு, கேமராவிற்கு முன்பாகவே ஆபாசமான மற்றும் வக்கிரமான செயல்களில் ஈடுபடுவது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அந்தப் பகுதியில் உள்ள பெண்கள் மிகுந்த அச்சத்திலும் பாதுகாப்பற்ற உணர்விலும் உள்ளனர். இது தொடர்பாக சாமராஜநகர் நகர காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த மனநலம் பாதிக்கப்பட்ட வக்கிர நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
