Connect with us

CINEMA

இந்த புகைப்படத்தில் இருக்கும் சினிமா பிரபலம் யார் தெரியுமா?… இன்று அவர் முன்னணி இசையமைப்பாளர்… 

தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இவர் பீட்சா, சூது கவ்வும், பீட்சா 2, பில்லா, ஜிகர்தண்டா, மெட்ராஸ் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

   

 

அதைத்தொடர்ந்து பில்லா ரங்கா என்ற தெலுங்கு திரைப்படத்திற்கும் இவர் இசையமைத்திருக்கிறார். சினிமாவில் இசையமைக்க வந்த குறுகிய காலத்தில் 20 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார். சந்தோஷ் நாராயணனின் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் ஏ ஆர் ரகுமானின் ஸ்லம்டாக் மில்லினியர் படம் தான்.

பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பின்னணி இசைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் சந்தோஷ் நாராயணன். இவர் சமீபத்தில் விஜயின் பைரவா, தனுஷின் கொடி, வடசென்னை, சூப்பர் ஸ்டாருடன் காலா மற்றும் பரியேறும் பெருமாள் உள்ளிட்ட திரைப்படத்தில் இசையமைத்திருக்கின்றார்.

இவர் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒரு ஸ்டைலில் இருக்கும். இது அனைவருக்கும் பிடித்த வகையிலும் இருக்கும். இப்படி புகழுக்குரிய இவர் மீனாட்சி ஐயர் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தீக்ஷிதா வெங்கடேசன் என்ற மகள் இருக்கிறார். இவரும் ஒரு பிரபல பாடகி தான். ‘என்ஜாயி எஞ்சாமி’ என்ற இவரது பாடல் பட்டி தொட்டியெங்கும் ஹிட் அடித்தது. அடுத்தடுத்து படங்கள் மற்றும் தொடர் ஹிட் பாடல்கள் என்று பிசியாக வலம் வருகிறார்.

சமீபகாலமாகவே இணையத்தில் பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்தவகையில் தற்பொழுது இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது அம்மா மற்றும் அப்பாவுடன் எடுத்துக் கொண்ட சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதோ அந்த புகைப்படம்…

Continue Reading

More in CINEMA

To Top