Connect with us

CINEMA

‘மாமன்னன் 50-வது நாள் கொண்டாட்டம்’…  இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் செய்த நெகிழ்ச்சியான செயல்… குவியும் பாராட்டுக்கள்…

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படம் ‘மாமன்னன்’. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், ரவீணா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். சாதி வேறுபாட்டை பேசும் படைப்பாக இத்திரைப்படம் உருவாகியிருந்தது. சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் இந்திய அளவில் நம்பர் 1 இடத்தை பிடித்தது.

   

ஜூன் மாதம் 29ம் தேதியன்று ரிலீசான இத்திரைப்படம் இதுவரை திரையரங்குகளில் 55 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக திரை வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. படம் இன்னமும் சில திரையரங்குகளில் ஓடி வருகிறது. இப்படம் ரிலீஸாகி ஓரிரு நாளிலேயே சகசஸ் மீட் வைத்திருந்தனர். அப்போது பேசிய உதயநிதி ‘இது விரைவில் நடத்தப்பட்ட விழானு சொன்னீங்க. கண்டிப்பா 50ஆவது நாள் விழா வச்சு எல்லாருக்கும் ஷீல்ட் தருவோம். நான் இது தான் என்னுடைய கடைசி சினிமா மேடைனு நினைச்சேன்.

கண்டிப்பா 50வது நாள் நிகழ்ச்சி உண்டு’ என்று கூறினார். அவர் சொன்னபடி நேற்று  ‘மாமன்னன் 50வது நாள் கொண்டாட்டம்’ நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், ஏ ஆர் ரஹ்மான் என முன்னணி நட்சத்திரங்களும், பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

அப்பொழுது உதயநிதியின் பக்கத்தில் ஏ ஆர் ரஹ்மான்அமர்ந்திருந்தார். நடிகர் உதயநிதியும்,  கீர்த்தி சுரேஷும் மேடையில் இருந்து இறங்கி வந்த போது அதை பார்த்த அவர் உடனே எழுந்து கீர்த்தி சுரேஷை உட்கார சொல்ல அவர் மறுத்து வேறொரு இடத்தில் அமர்ந்து கொண்டார். தற்பொழுது இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ….

 

View this post on Instagram

 

A post shared by Cineulagam (@cineulagamweb)

Continue Reading

More in CINEMA

To Top