Categories: சினிமா

“என்னுடையது காதல் திருமணம் இல்ல” ஆனா.. முதல்முறையாக மனைவி பற்றி மனம் திறந்த இசையமைப்பாளர் தேவா..!

Spread the love

தமிழ் சினிமாவில் 80களில் இறுதியில் இசைஞானி இளையராஜாவின் ஆதிக்கம் தான் நிறைந்திருந்தது. அந்த சூழலில் தான் இசை புயல் ஏ ஆர் ரகுமான் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அதே காலகட்டத்தில் கானா பாடல்களின் தந்தையாக விளங்கும் தேவாவும் அறிமுகமானார். இந்த இரண்டு பெரிய ஜாம்பவான்களுக்கு மத்தியில் தானும் ஒரு சிறந்த இசையமைப்பாளராக மாற வேண்டும் என்று எண்ணி அதுவரை பிளாட்பார்ம் பாடல்கள் என்று அழைக்கப்பட்டு வந்த பாடல்களுக்கு கானா பாடல் என்று பெயரிட்டு தன்னுடைய திரைப்படங்களில் அதை பெரிய அளவில் பயன்படுத்தியது மட்டுமல்லாமல் அந்த விஷயத்தில் மிகப்பெரிய சாதனை படைத்தவராக தேவா மாறினார்.

 

கடந்த 1989 ஆம் ஆண்டு தமிழில் பிரபல நடிகர் ராமராஜன் நடிப்பில் வெளியான மனசுக்கேத்த மகாராசா திரைப்படம் மூலம் தான் தேவா இசை அமைப்பாளராக அறிமுகமானார். தமிழில் தொடர்ச்சியாக நல்ல பல படங்களை கொடுத்து வந்த தேவாவிற்கு கடந்த 1990 ஆம் ஆண்டு பிரசாந்த் நடிப்பில் வெளியான வைகாசி பொறந்தாச்சு என்ற திரைப்படம் தான் முதன் முதலில் தமிழக அரசு வழங்கும் மாநில விருதை பெற்று தந்தது. அன்று தொடங்கி இன்று வரை சினிமாவில் முன்னணியில் உள்ளார். இந்த நிலையில் தேவா சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது குடும்பம் பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அதில், நான் சின்ன வயசுல இருக்கும்போது படிப்பையும் பாதையில விட்டுட்டேன் அதனால நாம மேடையில் பேசும்போது நல்லா ஆங்கிலம் பேச வேண்டும் என்பதற்காக ஒரு நோட்டு எடுத்துக்கிட்டு இங்கிலீஷ் கிளாஸ் போய் கத்துக்கிட்டேன். அத கூட என் மனைவி கிண்டல் பண்ணுவாங்க. நீங்க இங்கிலீஷ் பேசுறது கூட தமிழ் பேசுற மாதிரி தான் இருக்குது எனக்கூறி என்ன கிண்டல் பண்ணாங்க. நமக்கும் இங்கிலீஷ் தெரியும் என்று பெருமையா இருந்தப்ப என்னோட பேர பசங்க நான் பேசுறத தவறு என்று சுட்டிக் காட்டுவாங்க. நாம சினிமால பிசியா இருக்க காலத்துல குடும்பத்தை கண்டுக்கவே மாட்டோம் ஆனால் ஒரு ஓய்வுன்னு வந்ததுக்கு அப்புறம் நம்மளோட நண்பர்கள் நம்ம குடும்பத்துல இருக்கவங்க தான்.

 

என் மனைவியை நான் திருமணம் செய்து கொண்டது காதல் திருமணம் என்று சொல்ல முடியாது. அவங்க ஒரு கிராமத்துல இருந்து சென்னைக்கு அவங்க சொந்தக்காரங்க வீட்டுக்கு வந்து இருந்தாங்க. அப்போ அந்தப் பக்கம் போறப்ப வரப்ப நான் அவங்கள பார்ப்பேன். ஒரு டைம் என்னுடைய நண்பர் ஒருத்தர் காதல் பாட்டு ஒன்றை கிட்டாரில் வாசிக்கும் போது அந்த பொண்ணு நினைச்சு நான் அழுதுட்டேன். பிறகு எங்க வீட்டில் எல்லாம் பேசி தான் கல்யாணம் பண்ணி வச்சாங்க.

இருந்தாலும் அது ஒரு காதல் என்று என்னால் சொல்ல முடியவில்லை. திருமணத்துக்கு அப்புறம் இத்தனை வருஷம் ஆச்சு என்னோட மனைவி ஒரு நாள் கூட ரெக்கார்டிங் வந்தது கிடையாது. வீட்டுக்கு முன்னாடியே ஸ்டூடியோ வச்சு கூட அவங்க வந்து எட்டி கூட பாக்கல. ஒரு படத்தின் பூஜை எப்படி இருக்கும் ப்ரொடக்ஷன் எப்படி இருக்கும் என்பது கூட அவங்களுக்கு தெரியாது. இன்னும் சொல்லப்போனால் சினிமா பத்தி அவங்களுக்கு ஒண்ணுமே தெரியாது. இருந்தாலும் நான் பாடுற பாட்டுல எங்கேயாவது ஏதாவது தப்பு இருந்தா கரெக்டா கண்டுபிடிச்சு சொல்லுவாங்க என்று தனது குடும்பம் பற்றி தேவா பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

குடிமகனாக மாறிய கெவின் பீட்டர்சன்? மதுக்கடையில் கேமரா முன்னிலையில் செய்த காரியம்… பதறிய ரசிகர்கள்… இறுதியில் காத்திருந்த ‘ட்விஸ்ட்’… இணையத்தை அதிரவைக்கும் வீடியோ…!!!

இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…

12 minutes ago

காட்டில் ஒரு அதிசயம்!… பிறந்த ஒரே நாளில் இணையத்தை ஆக்கிரமித்த குட்டி காண்டாமிருகம்… வைரலாக கியூட் வீடியோ…!!!

இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…

23 minutes ago

8-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ. 50,000 வைப்பு நிதி… தமிழக பாஜக தேர்தல் அறிக்கையில் அதிரடி வாக்குறுதி..!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…

36 minutes ago

கேரள விடுதியில் பயங்கரம்!… பெண் பயணியை முறைத்துப் பார்த்து உரிமையாளர் செய்த காமவெறிச் செயல்… வைரலாகும் ‘பகீர்’ வீடியோ…!!!

கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…

36 minutes ago

“நான் ஒரு அரசு ஊழியர், கைநிறைய சம்பளம் வாங்குறேன்” குடிபோதையில் டிராஃபிக் ஜாமில் காரை நிறுத்தி போலீசாருடன் மல்லுக்கட்டிய பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…

42 minutes ago

“இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் சலுகை ரத்து” கைவிரித்த அமெரிக்கா… வெனிசுலாவை நோக்கி ஓட வேண்டிய கட்டாயம் – கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் பூகம்பம்..!!

கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு இனி சலுகைகள் வழங்கப்படாது என்று அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும்…

52 minutes ago