“ஆசையா அத்தை சமைத்த கறி விருந்து”… சாப்பிட விடாமல் டார்ச்சர் செய்த மாமனார்… ஆத்திரத்தில் வீட்டை பூட்டிவிட்டு மருமகன் செய்த கொடூரம்…!

Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் கல்லுகூட்டம் அருகே உள்ள நெடுந்தாரவிளை கிராமத்தை சேர்ந்த ராஜா (58) என்ற கூலித் தொழிலாளிக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் இருவருக்குமே திருமணம் ஆகிவிட்டது. இதனால் தன் மனைவியுடன் அதே பகுதியில் உள்ள வீட்டில் தனது மூத்த மகள் மற்றும் மருமகன் ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு வீட்டில் ராஜா திடீரென்று உயிரிழந்த நிலையில் தகவல் அறிந்த இளைய மகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதில் தன்னுடைய தந்தை ராஜா வீட்டில் தனியாக இருந்தபோது மாடி படிக்கட்டில் ஏறியதில் தவறி விழுந்து காயமடைந்ததாகவும் பக்கத்து வீட்டை சேர்ந்த நபர் கொடுத்த தகவலின் படி அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மீண்டும் வீடு திரும்பிய நிலையில் குடிக்க தண்ணீர் கேட்டவர் தண்ணீர் குடிக்கும் போது பெருமூச்சு விட்டு உயிரிழந்து விட்டதாகவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராஜாவின் சடலத்தை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர். பிரேத பரிசோதனை அறிக்கையில் ராஜா கடுமையாக தாக்கப்பட்டு இருப்பது உயிரிழப்புக்கு காரணம் என தெரிய வந்ததால் போலீசார் ராஜாவின் மூத்த மகளின் கணவரான சசியை பிடித்து விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் வெளிவந்தது.

மது போதைக்கு அடிமையான ராஜா மருமகன் சசியின் உழைப்பில் வாழ்ந்து வந்த போதிலும் சசியிடமும் குடும்பத்தினரிடமும் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று போதையில் வந்த ராஜா சசியை குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட விடாமல் மற்றும் மனைவி சமைத்த கறி விருந்தை கூட சாப்பிட விடாமல் தன்னிடம் தகராறு செய்ததாகவும் தொடர்ந்து அடுத்த நாள் போதையில் இருந்த ராஜா சனிக்கிழமை இரவும் தன்னிடம் வம்பு இழுத்து தகராறில் ஈடுபட்டதால் ஆத்திரம் அடைந்த தான் கட்டையால் மாமனாரை தாக்கியதாகவும் சசி தெரிவித்து.

தாக்குதலில் தலை மற்றும் உடலில் காயமடைந்த ராஜா மயங்கி சரிந்ததால் உயிரிழந்து விட்டதாக நினைத்தேன் வீட்டிலேயே போட்டு பூட்டிவிட்டு குடும்பத்துடன் தப்பி சென்று விட்டார். மாமனாரை கட்டையால் அடித்துக் கொலை செய்துவிட்டு மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து விட்டதாக நாடகமாடிய வெல்டிங் தொழிலாளி கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Nanthini

Recent Posts

அமெரிக்க கப்பல்களை தாக்க டால்பின்களை பயன்படுத்தும் ஈரான்..? புது டெக்னாலஜியால் மிரண்டு போன டிரம்ப்… பெரும் பரபரப்பு..!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…

3 மணத்தியாலங்கள் ago

3 வயது சிறுவனை.. 30 மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற தெருநாய்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வைரல்…!

கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…

3 மணத்தியாலங்கள் ago

உலகையே அதிர வைத்த வினோத விழிப்புணர்வு! வெண்கல மணிக்குள்ளே நிர்வாணமாகத் தொங்கிய கலைஞர்..வைரலாகும் ஷாக் வீடியோ..!

வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…

3 மணத்தியாலங்கள் ago

ஒரே நொடி.. பதற வைக்கும் விபத்து..! மின்னல் வேகத்தில் பிரேக் போட்ட கார் டிரைவர் – ஜாபுவாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…

3 மணத்தியாலங்கள் ago

விஜய்யின் முதல்வர் பதவியேற்பு விழா ரத்து..? கடைசி நேரத்தில் அதிர்ச்சி.. நாளை நடக்கப்போவது என்ன..??

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…

4 மணத்தியாலங்கள் ago

“தலைவருக்காக என் பதவியை ராஜினாமா செய்யத் தயார்” முதல்வரிடம் தமிமுன் அன்சாரி உருக்கம்… ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை..!!

சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…

4 மணத்தியாலங்கள் ago