“நான் கேட்டா உன்னால பணம் தர முடியாதா?”… தினம் தினம் பணத்துக்காக திட்டிய மனைவி… ஆத்திரத்தில் ஒரே போடாய் போட்ட கணவன்… காட்டுக்குள் நடந்த பயங்கர சம்பவம்…!

Spread the love

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வெள்ளக்கோவில் அருகே கணபதி பாளையம் அப்பையன் பகுதியை சேர்ந்த பெரியசாமி (77) மற்றும் புஷ்பாத்தாள்(65) தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களுடைய மூத்த மகனான பரமசிவன் என்பவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டதால் திருமணம் ஆகாமல் பெற்றோருடன் இருந்துள்ளார். இரண்டாவது மகனான முருகேசன் என்பவருக்கு அவருடைய உறவுக்கார பெண்ணுடன் திருமணம் நடந்த நிலையில் அவர் தன்னுடைய குடும்பத்துடன் தனியாக வசித்து வந்தார்.

இதனிடையே கூலி வேலை செய்து வந்த பெரியசாமி வயது மூப்பு காரணமாக எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்து உள்ளார். இதனால் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து கோழி மற்றும் ஆடுகளை வளர்த்து விற்பனை செய்து அதில் வரும் வருமானத்தை வைத்து வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர். ஆடு, மாடு மற்றும் கோழிகளை விற்பனை செய்யும் பணத்தை மனைவி கணவருக்கு கொடுக்காமல் தன்னிடமே வைத்துக் கொள்வாராம். எனவே பெரியசாமி தனக்கு ஏதாவது வேண்டுமென்றால் கூட தனது மனைவியிடம் பணம் வாங்கி தான் வாங்க வேண்டிய சூழல் இருந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பெரியசாமி பணத்தைக் கேட்கும் போது அவருடைய மனைவியை கொடுக்க மறுத்து அவரை தொடர்ந்து திட்டி வந்துள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரம் அடைந்த கணவன் பெரியசாமி கட்டையால் மனைவியை சரமாரியாக அடித்து கொலை செய்துள்ளார். உடனே இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கணவன் பெரியசாமியை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“700 ரூபாய் வந்தே பாரத் டிக்கெட் வெறும் 380 ரூபாய்க்கு விற்பனை! ‘சைடு வருமானம்’ பார்த்த டிடிஇ அதிரடி சஸ்பெண்ட் – வைரல் வீடியோ பின்னணி..!!

வந்தே பாரத் விரைவு ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு, 700 ரூபாய் மதிப்புள்ள டிக்கெட்டை வெறும் 380 ரூபாய்க்கு…

2 மணத்தியாலங்கள் ago

திக் திக்..! காட்டில் ஒரு நேரடி வேட்டை… நேரம் பார்த்து பசுவை குறிவைத்த சிங்கம்… மிரண்டுபோன சுற்றுலாப்பயணிகள்… இணையத்தில் வைரலாகும் அரிய வீடியோ…!!

குஜராத் மாநிலம் கிர் தேசிய பூங்காவில் சஃபாரி சென்ற சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் விதமாக…

2 மணத்தியாலங்கள் ago

“கம்பெனிக்காரனே கலங்கிப்போயிருப்பான்!” சொகுசு பைக்கை லோடு வண்டியாக்கிய பெண்… “₹2 லட்சம் மதிப்புள்ள ஸ்போர்ட்ஸ் பைக்கில் பழைய இரும்பு வியாபாரம்… இணையத்தை அதிரவைத்த வீடியோ..!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ராஜஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 'தேசி ஜுகாட்' (உள்ளூர்…

2 மணத்தியாலங்கள் ago

BREAKING: ​நீட் UG 2026 தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம்.. சிபிஐ அதிகாரப்பூர்வமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை..!!

நீட் (NEET UG) தேர்வில் வினாத்தாள் கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக சிபிஐ (CBI) அதிகாரப்பூர்வமாக வழக்குப் பதிவு…

2 மணத்தியாலங்கள் ago

“டிரைவர் மகன் டூ அரசு கொறடா” விருகம்பாக்கம் சபரிநாதனுக்கு முக்கியப் பொறுப்பு வழங்கி முதல்வர் விஜய் அதிரடி..!!

தமிழக அரசின் கொறடாவாக விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சபரிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் விஜய்யின் ஓட்டுநராகப் பணியாற்றிய ராஜேந்திரனின் மகனான…

2 மணத்தியாலங்கள் ago

தவெக MLA தகுதி நீக்கம்..? ஆளுநருக்கு பறந்த பரபரப்பு கடிதம்… மறைக்கப்பட்ட அந்த உண்மை.. அதிர்ச்சியில் விஜய்…!!

தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், சேலம் மேற்கு தொகுதி தவெக எம்.எல்.ஏ லட்சுமணனை தகுதி நீக்கம்…

2 மணத்தியாலங்கள் ago