#image_title
பிரபல நடிகரான முரளி பெங்களூரைச் சேர்ந்தவர். 99 படங்களில் முரளி கதாநாயகனாக நடித்துள்ளார். முதல் முதலில் பூவிலங்கு என்ற திரைப்படம் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இந்த படம் 1984-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடித்த பகல் நிலவு திரைப்படம் அவருக்கு நல்ல பெயரைத் தந்தது. அதன் பிறகு முரளி நடித்த புது வசந்தம், இதயம் கடல் பூக்கள் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் ஆனது.
கடல் பூக்கள் திரைப்படத்தில் நடித்ததற்காக முரளிக்கு தமிழக அரசின் சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. முரளி முன்னணி நடிகர்களான சிவாஜி கணேசன், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், பிரபுதேவா, கார்த்திக், பார்த்திபன், சரத்குமார் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் முன்னணி நடிகைகளான மீனா, ரோஜா, சிம்ரன், தேவயானி, லைலா, ரம்பா உள்ளிட்டோருடன் இணைந்து நடித்துள்ளார்.
தற்போது முரளியின் வாரிசுகளான அதர்வா மற்றும் ஆகாஷ் ஆகிய இருவருமே தமிழ் சினிமாவில் நடிகர்களாக உள்ளனர். கர்நாடகாவைப் பூர்விகமாகக் கொண்டிருந்தாலும் முரளி அதிகமாக நடித்தது தமிழ் படங்களில்தான். அவரைக் கதாநாயகனாக ஏற்றுக் கொண்டதும் தமிழ்நாட்டு மக்கள்தான்.
தமிழ்ப் படங்களில் நடித்துக் கொண்டிருந்த போது முரளிக்குத் திருமணம் ஆனது. மனைவியை சென்னைக்கு அழைத்து வந்து ஒரு ஹோட்டலில் தங்கி வாழ்ந்துள்ளார். ஆனால் அப்போது அவருக்குப் படங்கள் குறைந்து கையில் காசு இலலாததால் ஹோட்டலில் இருந்து அவரை காலி பண்ண சொல்லியுள்ளார்கள்.
அப்போது என்ன செய்வது என தெரியாமல் தவித்த முரளிக்கு நடிகர் பாவா லட்சுமணன் தன்னுடைய நண்பர்களோடு சேர்ந்து உடனடியாக வாடகைக்கு வீடு பார்த்துக் கொடுத்து வேண்டிய பொருட்களை எல்லாம் வாங்கிக் கொடுத்து தங்கவைத்தார்களாம். இந்த தகவலை பாவா லட்சுமணனே சமீபத்தைய நேர்காணலில் தெரிவித்துள்ளாராம். அதனால் இப்போது கூட எப்போது பார்த்தாலும் முரளியின் மனைவி அவரைப் பார்த்து பாசமாக நலம் விசாரிப்பாராம்.
தமிழ் சினிமாவில் தனது மாறுபட்ட கெட் அப் மற்றும் நடிப்பால் ரசிகர்களை கட்டி போட்டவர் விக்ரம் இப்போது விக்ரம் பா.ரஞ்சித்…
சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ராகவா லாரன்ஸ். நடிப்பு மட்டுமில்லாமல் பிறருக்கு உதவி செய்யும் குணத்தால் மக்கள் மனதில்…
தமிழ் சினிமாவில் ஹீரோயின் ஆகவும் சரி வில்லியாகவும் சரி தனது நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் வரலட்சுமி சரத்குமார். இவர் பிரபல…
பிரபல நடிகையான அமலா புதுபாடகன் என்ற திரைப்படத்தில் நடித்த போது அப்படத்தில் பாதி சம்பளமே வாங்காமல் நடித்தாராம். இதனை படத்தின்…
தமிழ் சினிமாவில் முந்தானை முடிச்சு திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனவர் கோவை சரளா. அந்த படத்தில் அவருக்கு சிறிய…
தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகராக அறியப்படுபவர் அழகம் பெருமாள். இவர் மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே திரைப்படத்தின் மூலமாக நடிகராக…