#image_title
தமிழ் சினிமாவில் முந்தானை முடிச்சு திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனவர் கோவை சரளா. அந்த படத்தில் அவருக்கு சிறிய வேடம் கொடுத்த பாக்யராஜ். அதன் பின்னர் தான் இயக்கிய சின்னவீடு திரைப்படத்தில் கதாநாயகனின் தாயார் வேடத்தில் நடிக்கவைத்தார். அப்போது கோவை சரளாவுக்கு வெறும் 17 வயதுதானாம். ஆனால் தன்னுடைய நடிப்பால் அந்த குறை தெரியாதவாறு பார்த்துக் கொண்டார்.
அதன் பின்னர் காமெடி நடிகையாக தமிழ் சினிமாவில் பல ஆண்டுகள் நடித்து புகழ்பெற்றார் கோவை சரளா. மனோரமாவுக்குப் பிறகு கோவை சரளாதான் என்ற நிலையை தமிழ் சினிமாவில் உருவாக்கினார். காமெடி நடிகர்களான கவுண்டமணி, வடிவேலு, விவேக் ஆகியோருக்கு ஜோடியாக நடித்து பட்டையக் கிளப்பினார்.
சதி லீலாவதி படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாகவும் நடித்தார். அதன் பின்னர் தனக்கு வயதானதும் சந்தானம், யோகி பாபு வரை அனைவரோடும் நடித்தார். இதற்கிடையில் அவருக்கு தெலுங்கு சினிமாவில் இருந்து வாய்ப்பு வர அங்கு சென்ற அவர் சில ஆண்டுகள் அங்கேயே தொடர்ந்து நடிக்கும்படி ஆனது.
#image_title
தெலுங்கில் லெஜண்ட் நடிகரான பிரம்மானந்தம் அவர்களோடு பல படங்களில் இணைந்து நடித்தார். அவருடன் நடித்த அனுபவம் பற்றி பேசியுள்ள கோவை சரளா “பிரம்மானந்தம் சார் ஒரு லெஜண்ட். அவர் கூட நடிப்பது ஜாலியான அனுபவம். அவர் போல இத்தனை ஆண்டுகள் நிலைத்து நிற்கக் கூடிய காமெடியன்கள் யாரும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். தமிழில் கூட காமெடியன்ஸ் ஒரு கட்டத்துல காணாம போயிடுவாங்க. ஆனால் பிரம்மானந்தம் கவுண்டமணி காலத்துல இருந்து இப்ப வர நடிச்சுட்டேதான் இருக்கார். அவர மாதிரி லெஜண்ட் எல்லாம் இண்டஸ்ட்ரிக்குக் கிடைத்த பாக்கியம்தான்” எனக் கூறியுள்ளார்.
சட்டவிரோதமாக இணையதளங்களில் கசிந்த 'ஜன நாயகன்' திரைப்படம், சில உள்ளூர் கேபிள் டிவி சேனல்களிலும் அனுமதியின்றி ஒளிபரப்பப்பட்ட சம்பவம் பெரும்…
மேற்கு ஆசியாவில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஈரானை…
சர்வதேச அரசியல் மேடையில் அமெரிக்கா மற்றும் கியூபா இடையிலான உறவு மீண்டும் ஒரு இக்கட்டான நிலையை எட்டியுள்ளது. குறிப்பாக, வெனிசுலாவின்…
சிரிப்புக்கும் குதூகலத்திற்கும் பெயர்போன 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி, தற்போது சர்ச்சைகளுக்கும் சென்டிமென்ட் காட்சிகளுக்கும் களமாக மாறியிருப்பது ரசிகர்கள் மத்தியில்…
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி ஏற்கனவே முடங்கியுள்ள நிலையில், தற்போது ஆசியாவின் மற்றொரு முக்கியப் பகுதியான…
தூத்துக்குடி மட்டக்கடை கோவில் தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியனின் மனைவி பிரேமா (58), தனது வீட்டில் வழக்கம்போல் குத்துவிளக்கு ஏற்றி வைத்து…