Categories: சினிமா

ஒரு இயக்குனருக்காக எம்ஜிஆரை காக்க வைத்த ஏ.வி.எம்.. இறுதியில் ஒத்த வார்த்தையில் அனைவரையும் அசர வைத்த MGR..!

Spread the love

தமிழ் சினிமாவில் காலம் கடந்தாலும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள ஒரு நடிகர் என்றால் அது எம்ஜிஆராக தான் இருக்க முடியும். சிறுவயதில் நாடக நடிகராக அறிமுகமாகி அதன் பிறகு தன்னுடைய திறமையின் மூலமாக பல வெற்றிகளை குவித்து முன்னணி நடிகராக உயர்ந்த பெருமைக்குரியவர். இவர் தன்னுடைய ஆரம்ப காலத்தில் சில சருக்கல்களை சந்தித்து இருந்தாலும் ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். பிறகு ஒரு கட்டத்தில் அரசியல் கட்சி தொடங்கிய எம் ஜி ஆர் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களின் ஆதரவுடன் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அந்த காலகட்டத்தில் பாக்கியராஜ் இயக்கிய நடித்த முந்தானை முடிச்சு என்ற திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது. இந்த திரைப்படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்து இருந்த நிலையில் படத்தின் வெற்றி விழாவுக்கு எம்ஜிஆர் வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து அவரிடம் தேதியை கேட்டுள்ளனர். அப்போது முதல்வராக இருந்த எம் ஜி ஆரும் அடுத்த வாரமே ஒரு நாளில் விழா வைத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

எம்ஜிஆர் கொடுத்த நாளுக்கு கிட்டத்தட்ட ஒரு வாரம் மட்டுமே இருந்ததால் ஒரு மாதத்திற்கு பிறகு விழாவை நடத்தும் வகையில் தேதியை மாற்றி கொடுக்குமாறு எம்ஜிஆரிடம் சென்று ஏவிஎம் கேட்டுள்ளார். இதனைக் கேட்ட எம்ஜிஆர் ஏன் என்று கேட்க, எங்கள் விழா அனைத்திலும் இயக்குனர் எஸ் பி முத்துராமன் தான் நன்றியுரை வழங்குவார், ஆனால் தற்போது அவர் கண் ஆபரேஷன் செய்து கொண்டு ஓய்வில் இருப்பதால் அவரால் வர முடியாது, ஒரு மாதம் கழித்து விழா நடத்தினால் அவர் வர வசதியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

இதனைக் கேட்ட எம்ஜிஆர் எல்லோரும் எனக்காக காத்திருப்பார்கள் நான் ஒரு இயக்குனருக்காக காத்திருக்க வேண்டுமா சரி என்று கூறிவிட்டு தேதியை மாற்றி கொடுத்துள்ளார். அதன் பிறகு அவர் குறித்த நாளில் விழா நடக்க எஸ்.பி முத்துராமன் நன்றியுறையை வழங்கியுள்ளார். எம்ஜிஆரும் மனநிறைவோடு வந்து விழாவை சிறப்பித்துக் கொடுத்துள்ளார்.

Nanthini

Recent Posts

தர்பூசணியா? இல்லை விஷமா? வெட்டும்போது பொங்கிய வெள்ளை நுரை .. இணையத்தை அதிர வைக்கும் பகீர் வீடியோ..!

பிரபல யூடியூபர் கௌரவ் தனேஜா தான் வாங்கிய தர்பூசணி ஒன்றில் இருந்து நுரை பொங்கி வழியும் வீடியோவை சமூக வலைதளங்களில்…

9 மணத்தியாலங்கள் ago

பகீர்… மஞ்சள் நீராட்டு விழாவில் நேர்ந்த விபரீதம்.. முகத்தில் பூசிய மஞ்சளால் வீங்கிய உதடுகள் – கண்ணீரில் மணப்பெண்..

மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில், திருமணச் சடங்கின் போது பூசப்பட்ட மஞ்சள் அலர்ஜியானதால் மணப்பெண் ஒருவரின் முகம் வீங்கிப்போன…

9 மணத்தியாலங்கள் ago

வாழ்வா? சாவா? நொடிக் கணத்தில் தப்பிய உயிர்.. ராஜநாகத்துடன் நேருக்கு நேர் மோதிய நாய் – இணையத்தை அதிர வைக்கும் பகீர் காட்சி..!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், புதர்கள் நிறைந்த ஒரு பகுதியில் நாய்க்கும் ராஜநாகத்திற்கும் இடையே நடந்த கடுமையான…

9 மணத்தியாலங்கள் ago

பகீர்… டெலிவரி பாய் வேடத்தில் வந்த கொள்ளையன்.. கோயில் வளாகத்திலேயே கைவரிசை – சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி..!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பாலாஜி கோயில் வளாகத்தில், டெலிவரி பாய் வேடத்தில் வந்த வாலிபர்…

9 மணத்தியாலங்கள் ago

சச்சினையே சொக்க வைத்த குட்டி இன்ஜினியர்… திறமைக்குத் தடை ஏது?.. கார் தயாரித்த கிராமத்துச் சிறுவன்.. வைரலாகும் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கிராமப்புறத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் தங்களின் கைவினைத் திறமையால் ஒரு சிறிய…

10 மணத்தியாலங்கள் ago

தந்தையே எமனாக மாறிய அவலம்!” – மகனைத் தீர்த்துக்கட்டிவிட்டு தானும் முடித்துக் கொண்ட தந்தை; ஒரு நொடி ஆத்திரத்தால் சிதைந்த குடும்பம்.!

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவரே தனது 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தானும்…

10 மணத்தியாலங்கள் ago