தூத்துக்குடியில் இன்று நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் 41 தொழில் நிறுவனங்களோடு ரூ.32,554 கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகின்றன. இந்த தொழில் முதலீடுகள் மூலமாக 50,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. தூத்துக்குடியில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ள அரங்கில் ஏற்பாடுகளை அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு செய்தார். தற்போது இதில் கலந்து கொள்ள முதல்வர் சென்னையில் இருந்து புறப்பட்டுள்ளார்.
