இங்கிலாந்தைச் சேர்ந்த 2 வயது சிறுமி இசபெல், அவரது தாய் அலெக்ஸாண்ட்ரா வாக்கர் (25) மற்றும் அவரது காதலர் ஹாரிசன் சிம்ப்சன் (22) ஆகியோரால் வாரக்கணக்கில் கொடூரமான வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக உயிரிழந்துள்ளார். 2025 செப்டம்பர் 12 அன்று லண்டனுக்கு அருகிலுள்ள ஹார்டிங்டன் க்ளோஸ் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவ உதவியாளர்கள், குழந்தையை மாடிப்படிக்கு அடியில் கண்டெடுத்து அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், தீவிர சிகிச்சை பலனின்றி இரண்டு நாட்களுக்குப் பிறகு அந்தச் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
டீஸ்சைட் கிரவுன் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்த பிரேதப் பரிசோதனை அறிக்கையின்படி, குழந்தையின் தலை, கழுத்து, வயிறு, முதுகு மற்றும் அந்தரங்க உறுப்புகளில் கடுமையான காயங்கள் இருந்தன. அக்குழந்தை மிகக் கொடூரமாக உலுக்கப்பட்டதால் முதுகுத்தண்டு அளவுக்கு மீறி நீட்டப்பட்டு, தலை கடினமான பரப்பில் மோதியுள்ளது கண்டறியப்பட்டது. மேலும், குழந்தையின் உடலில் 21 எலும்பு முறிவுகளும், வன்முறையால் ஏற்பட்ட பல காயங்களும் இருந்தன. அளவுக்கு அதிகமான போதைப்பொருள் மற்றும் மதுப்பழக்கத்திற்கு அடிமையான இத்தம்பதியினர், கடந்த கோடைக் காலத்தில் இணைந்ததிலிருந்தே குழந்தையைத் தொடர்ச்சியான வன்முறைக்கும் பாலியல் வன்கொடுமைக்கும் உள்ளாக்கியுள்ளனர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இசபெல் இறப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, கால் எலும்பு முறிவுக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதே, மருத்துவர்கள் சிலர் குழந்தையின் நிலை குறித்து கவலை தெரிவித்துள்ளனர். ஆனால், அது அலட்சியப்படுத்தப்பட்டு குழந்தை தாயிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு இவ்வளவு பெரிய பாதிப்புகள் ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் நோய்வாய்ப்பட்டிருந்த போதும், அவர்கள் மருத்துவ உதவியை நாடாமல் வேண்டுமென்றே தாமதித்துள்ளனர். இறுதியாகக் காதலர் கூறிய பிறகே தாய் ஆம்புலன்ஸை அழைத்துள்ளார். தங்களின் குற்றங்களை மறைக்க முயன்ற இத்தம்பதியினர் மீது தற்போது குழந்தையை வன்கொடுமை செய்து கொலை செய்ததற்கான வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…