மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் உல்லாஸ்நகர் பகுதியைச் சேர்ந்த அம்ருதா என்ற 19 வயது இளைஞர், அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு அம்ருதாவின் தாய் ஆஷா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், சம்பவத்தன்று அதிகாலை நேரத்தில் தனது மகளிடம் காதலை உடனடியாகக் கைவிடுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் அம்ருதா தாயின் பேச்சைக் கேட்க மறுத்துக் காதலைக் கைவிட முடியாது என உறுதியாகக் கூறி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற தாய் ஆஷா, மகள் அணிந்திருந்த துப்பட்டாவால் அவரது கழுத்தை இறுக்கிக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். மூச்சுத்திணறி மகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துக் சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், உல்லாஸ்நகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து பெற்ற தாயைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற தாயே மகளைக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…
குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…
தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…