திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் ‘லிவ்-இன்’ உறவில் வாழ்ந்து வந்துள்ளார். இந்தப் பெண்ணுடன் அவரது பத்து வயது மகளும் அதே வீட்டில் வசித்து வந்துள்ளார். ஆனால், பாதுகாப்பிற்காக நம்பி வந்த இடத்தில், தனது மகளுக்கே நேர்ந்த கொடுமை அந்தத் தாயை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கைது செய்யப்பட்ட நேஹா காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில், தனது காதலன் அர்ஜுன் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது பத்து வயது சிறுமிக்குத் தவறான காரியங்களைச் செய்து, அவர்களது வாழ்க்கையையே சீரழித்து வந்ததாகக் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார். தாய்க்குத் தெரியாமல் மறைமுகமாக நடந்த இந்த அத்துமீறல்கள் ஒரு கட்டத்தில் வெளிச்சத்திற்கு வந்தபோது, அந்தப் பெண் கடும் ஆத்திரமடைந்துள்ளார்.
“என் குழந்தைக்கு அவன் செய்த கொடுமைகளை என்னால் இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை” என்று கூறிய நேஹா, ஆத்திரத்தின் உச்சியில் தனது காதலனைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். மகளின் எதிர்காலத்தையும் நிம்மதியையும் சிதைத்த காதலனைத் தானே தண்டிக்கத் துணிந்த இந்தத் தாயின் செயல் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது காவல்துறையினர் இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
