ஆறு பச்சிளம் குழந்தைகளைத் தவிக்கவிட்டுத் தனது காதலனுடன் ஓடிப்போன ஒரு பெண், “கணவன் வயதாகிவிட்டார், காதலன் தான் எனது ஆசைகளைப் பூர்த்தி செய்கிறான்” என்று கூறி அதிரவைத்தார். கணவனையும் குழந்தைகளையும் விட்டுப் பிரிய வேண்டாம் என்று சமூகம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், எதையும் காதில் வாங்காமல் அவர் காதலனுடன் சென்றார்.
ஆனால், அதன் விளைவு மிகவும் கசப்பானதாக அமைந்தது. ஒரு வருடம் அந்தப் பெண்ணுடன் சுகபோகமாக வாழ்ந்த காதலன், திடீரென ஒருநாள் அவரைத் தனியே தவிக்கவிட்டுவிட்டுத் தப்பியோடினான். தற்போது கணவனாலும் ஏற்றுக்கொள்ளப்படாமல், காதலனாலும் கைவிடப்பட்டு அந்தப் பெண் வீதி வீதியாக அலைந்து கொண்டிருக்கிறார். இச்சம்பவம் குறித்துப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள காதலனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
