திடீர் திருப்பம்… தவெகவில் கூண்டோடு இணைந்த 300 பேர்… அஜிதா வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு…!

By Nanthini on மார்கழி 31, 2025

Spread the love

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடும்போது 2026 சட்டமன்றத் தேர்தல் பல திருப்பங்களை எதிர்கொண்டு வருகின்றது. குறிப்பாக விஜயின் அரசியல் வருகை என்பது பலரையும் கதி கலங்க வைத்துள்ளது. விஜய்க்கு கட்சி ஆரம்பித்தது முதலே மக்கள் மத்தியில் ஆதரவு கூடிக் கொண்டே செல்கிறது.

விஜய்க்கும் அவருடைய ரசிகர்களுக்கும் அரசியல் அனுபவம் இல்லை என்று விமர்சனம் அனைவராலும் முன்வைக்கப்பட்டாலும் இதனை முறியடிக்கும் வகையில் 50 ஆண்டுகால அரசியல் அனுபவம் வாய்ந்த நபரான செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்து விஜய்க்கு பலத்தை கூட்டினார். இவர் கட்சியில் இணைந்த கையுடன் இன்னும் சில முக்கிய அமைச்சர்கள் விஜய் கட்சியில் சேர உள்ளனர். அதற்கான பணிகளை நானே மேற்கொள்வேன் என்று கூறி பரப்பரப்பை கிளப்பினார்.

   

இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக்கலகம் கட்சியில் தொடர்ந்து நிர்வாகிகள் பலரும் இணைந்து வரும் நிலையில் சமீபத்தில் விஜய் கட்சியில் 300 பேர் இணைந்ததாக தூத்துக்குடி தவெக நிர்வாகி அஜிதா பதிவு வெளியிட்டுள்ளார். அதில், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு ஒன்றாவது வார்டுக்கு உட்பட்ட சங்கரப்பேரி பகுதியில் கடந்த 21ஆம் தேதி அன்று 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை கோட்பாடுகளை ஏற்று தங்களை கட்சியில இணைத்து கொண்டனர் என குறிப்பிட்டுள்ளார். முன்னதாக இவர் தனது பொறுப்பு விளங்காத ஆத்திரத்தில் விஜயின் காரை மறித்ததும் தற்கொலைக்கு முயன்றதும் குறிப்பிடத்தக்கது.