தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே அதிமுக மற்றும் திமுக இடையே மட்டும்தான் போட்டி என்ற நிலைமை மாறி விஜய்யும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.
அதே சமயம் தனது கூட்டணியை பலமாக வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் இந்த முறையும் திமுக ஆட்சியை தமிழகத்தில் நிலைநாட்டி விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறார். அது மட்டுமல்லாமல் ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையில் மாற்று கட்சிணரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியும் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ளதால் திமுக தீவிரமாக களத்தில் இறங்கி செயல்பட்டு வருகிறது. தற்போது புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் மாற்றுக் கட்சியினரை சேர்ந்த 25க்கும் மேற்பட்டோர் என்று திமுகவில் இணைந்தனர். விராலிமலை மத்திய ஒன்றிய திமுக செயலாளர் கே பி ஐயப்பன் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்த இணைப்பு விரைவில் நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட திமுகவின் பலத்தை அதிகரிப்பதாக அமைந்துள்ளது.
